Saturday, April 7, 2012

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

திராவிட மாயை – ஒரு பார்வை -


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம். 

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிட இயக்க நூற்றாண்டுத் துவக்க விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, ‘திராவிட’ என்ற சொல்லை தானோ, பேராசிரியர் அன்பழகனோ உருவாக்கவில்லை என்றார். இந்திய நாட்டின் தேசிய கீதம் ‘ஜன கண மன’ என்ற பாடலை எழுதிய ரபீந்த்ரநாத் தாகூர் ‘திராவிட உத்கல வங்கா’ என்று எழுதியிருப்பதை அவர் சுட்டிக் காட்டியபோது, அங்கிருந்த உடன்பிறப்புகள் ஆர்ப்பரித்தார்கள். திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, இந்த மண்ணில் திராவிடம் என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீவேதாந்த தேசிகர், ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி, இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவுபட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல்தான். இந்த இயக்கங்களின் அடிப்படையான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம் கால்டுவெல்லின் கற்பனையில் உருவானதுதான்.... மொழி உணர்வு என்பது ஒற்றுமைக்குப் பயன்பட வேண்டும். அதை வேற்றுமைக்கெனப் பயன்படுத்தியதுதான் கழகத்தவர்களின் சாதனை. திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழாவில் கருணாநிதி, உ.வே.சாமிநாத ஐயரைச் சுட்டிக் காட்டினார். ஆனால், மொழி உணர்வு பற்றி, உ.வே.சா. கூறியதைப் பார்க்கலாம்:

1937-ஆம் வருடம் நடந்த இந்திய இலக்கியக் கழகத்தின் முதல் மாநாட்டில், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்த உரையில் “இந்த பாரதீய சாகித்ய பரிஷத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது! இதன் முயற்சிகளால் குறுகிய நோக்கங்களும், சிறு வேறுபாடுகளும் ஒழிந்து தமிழர்களுள் ஒற்றுமை, திராவிட பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை, பாரதீய பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை ஆகிய மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டாகுமென்றே நம்புகிறேன்” என்றார்.

இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும், அதற்கு மொழி உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைந்த தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை, தமிழர் பண்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம். தகர டப்பாவில் தாரை நிரப்பிக் கொண்டு, மொழிகளுக்கிடையே பகைமையை மூட்டிய கழகத்தவரின் செயலை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆரிய திராவிட இன வேறுபாடு என்ற கோட்பாடு, வரலாற்று ஆய்வாளர்களால் கைவிடப்பட்ட விஷயம். அதை தி.மு.க. மேடைகளில் தொடர்ந்து பேசுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று. சென்ற மாதம் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நடந்த ‘உயிரியல் தொழில் நுட்பத்தின் எல்லைகள்’ என்ற கருத்தரங்கில், காசி ஹிந்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் லால்ஜி சிங் பேசினார். ..



பள்ளிக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிற ஆரியப் படையெடுப்பு என்ற கருத்துக்கு அடிப்படையே இல்லை. இன்றைய இந்தியர்கள் அனைவருமே கலப்பினம்தான் என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரியரும் திராவிடரும் ஒரே பண்பாட்டின் பிரதிநிதிகள்” என்றார் அவர். பல்கலைக் கழக கருத்தரங்கில் மட்டும் பேசப்பட்ட கருத்து அல்ல இது. தி.மு.க. ஆட்சியின்போது நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா சிறப்புரையாற்றினார். “தெற்காசியாவின் பண்பாடும் கலாசாரமும் வட இந்தியர்களாலும், திராவிட மொழி பேசும் தென்னிந்தியர்களாலும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர். நாடு பிடிக்கும் ஆசைக்காகவும், மத மாற்ற லாபங்களுக்காகவும் தயாரிக்கப்பட்டதுதான் ஆரிய - திராவிட இன வாதம் என்ற நாடகம். இந்த நாடகம், அரிதாரம் வாங்கக் காசில்லாமல், அவையோர் எவருமில்லாமல் இழுத்து மூடப்பட்டு விட்டது. கலைஞர் மட்டும் பழைய வசனங்களையே பேசிக் கொண்டிருக்கிறார். கழகத்தவர் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். .


.courtesy:Thuglak

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

திராவிட மாயை – ஒரு பார்வை -


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம். 

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

நீதிக் கட்சியின் தோற்றத்திற்குக் காரணம், 1916- ஆம் ஆண்டு நடந்த தேர்தல் என்பதையும், தோல்வி அடைந்தவர்கள் பிராமண எதிர்ப்பைக் கொள்கையாக வகுத்துக் கொண்டார்கள் என்பதையும் முந்தைய இதழில் பார்த்தோம். 

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இன்னொரு இயக்கமும் துவக்கப்பட்டது. அது தனித் தமிழ் இயக்கம். திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தனித் தமிழ் இயக்கமும் ஒரு காரணியாக இருந்தது. எனவே, தனித் தமிழ் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். 

தமிழ், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலவராக இருந்தவர் ஸ்வாமி வேதாசலம். இவர் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மொழியை ஸம்ஸ்க்ருதச் சார்பில்லாமல் தனித்து இயங்கச் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். மறைமலை அடிகள் உருவாக்கியதுதான் தனித் தமிழ் இயக்கம். 

துவக்கத்தில், தனித் தமிழ் இயக்கம், நீதிக்கட்சிக்காரர்களோடு முரண்பட்டு இருந்தது. தமிழர்களுடைய கடவுள் சிவன்; தமிழர் சமயம் ஹிந்து சமயத்தைவிடத் தொன்மையானது என்று மறைமலை அடிகள் பேசி வந்தார். பிராமணர் அல்லாதாரை மறைமலை அடிகள் கடத்திக் கொண்டு போய் விடுவாரோ என்று நீதிக்கட்சிக்காரர்கள் பயந்து விட்டார்கள். தவிர, நீதிக்கட்சிக்காரர்களுக்கு ‘திராவிட’ என்று சொல்லிக் கொள்ள வேண்டி நிர்பந்தம் இருந்தது. நீதிக்கட்சித் தலைமையும் தமிழ் அல்லாதாரிடம் சிக்கியிருந்தது. மறைமலை அடிகளுக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே காரசாரமாக அறிக்கைகள் பறந்தன. கருத்து மோதல் ஏற்பட்டு கைகலப்பு, கலவரம் என்று தொடர்ந்தது. நீதிக்கட்சிக்காரர்களிடம் இருந்த புஜபலம் மறைமலை அடிகளிடம் இல்லை. நாளடைவில் அவருடைய குரல் வலுவிழந்தது. தனித் தமிழ் இயக்கத்தை திராவிட இயக்கம் கபளீகரம் செய்தது. 

மறைமலை அடிகளின் முயற்சி எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைப் பார்த்தாலே போதும். பொதுவுடமையாளர் ஜீவா, மறைமலை அடிகளை நம்பி ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால், மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா, தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக் கொண்டிருந்தார். மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா. வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா. யோசித்தபடியே உள்ளே சென்றார். மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச் சொல்லா?’ என்று கேட்டு விட்டார். ‘காரணம் என்பது எந்த மொழிச் சொல் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார். 

மறைமலை அடிகளின் வீட்டை விட்டு வெளியே வந்த ஜீவா, ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறி விட்டார். அடுத்து, தமிழில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி, பண்டித மணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம். 

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது,‘சங்க நூல்கள் எல்லாம் தனித் தமிழ் நூல்கள்; அவை ஸம்ஸ்க்ருதக் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார். பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக, ‘கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார். அடிகளார் அடங்குவதாக இல்லை. தேவார, திருவாசகங்கள் தனித் தமிழில் ஆக்கப்பட்டதென்று கூறினார். 

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் முதல் பதிகத்தில் ‘சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் ஸ்ம்ஸ்க்ருதச் சொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார். அடிகளாருக்குக் கோபம் வந்து விட்டது; கோபமாக மேஜையைக் குத்தினார். ‘எனக்கும் ஒரு மேஜை போட்டிருந்தால், இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்’ என்றார் பண்டிதமணி. 

நூறாண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகள் தொடங்கி வைத்ததின் தாக்கம் இன்றும் இருக்கிறது. நீதிக்கட்சியில் தொடங்கிய ஸம்ஸ்க்ருதம் கலவாத பெயர் வைத்துக் கொள்ளும் பழக்கம், மறுமலர்ச்சி தி.மு.க. வரை தொடர்கிறது. பெயர் மாற்ற நடவடிக்கையால் ராஜகோபாலன், சுரதாவாக மாறினார்; நாராயணசுவாமி நெடுஞ்செழியன் ஆக மாறினார். சத்யநாராயணன் ஆற்றலரசாக மாறினார். சின்னராஜு சிற்றரசாக மாறினார். இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டவர்கள், சில விஷயங்களை மட்டும் கண்டுகொள்ளவில்லை. சாதிக் பாட்சா விஷயத்தில் சத்தமே இல்லை. நாகூர் ஹனிஃபா விஷயத்தில் நடவடிக்கையே இல்லை. 

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. பெயர் வைக்கும்போது ஆங்கிலப் பெயர்கள், ஃப்ரெஞ்சுப் பெயர்கள், அராபியப் பெயர்கள், ரஷ்யப் பெயர்களாக இருந்தால் கூடுதல் மரியாதை உண்டு. பிராட்லா என்ற பெயரை ரசித்தார்கள். ரூசோ என்ற பெயரை விரும்பினார்கள். ட்ராட்ஸ்கி என்ற பெயரை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஸ்டாலின் என்ற பெயர் கொண்டவரைத் தூக்கிச் சுமக்கிறார்கள். இப்படியாக திராவிட மாயையில், தனித் தமிழ் மாயை இரண்டறக் கலந்து விட்டது. 

subbupara@yahoo.co.in 

courtesy:Thuglak, current issue.."தனித் தமிழ் மாயை – சுப்பு 
திராவிட மாயை – ஒரு பார்வை - 4"

Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

72 – க்கும், 26 – க்கும் திருமணம்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

‘தி
ருவண்ணாமலையில் ராஜாஜியைத் தாம் சந்தித்துப் பேசியது தமது சொந்த விஷயம்’ என்று அண்ணாதுரைக்கும், ஜி.டி.நாயுடுவுக்கும் கோவை மாநாட்டில் கோபத்துடன் பதில் அளித்த ஈ.வெ.ரா., பிறகு அதே மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் தாமாகவே இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“எனக்குப் பின் கட்சிக்கும், என் சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும். இதை விரைவில் செய்யப் போகிறேன்” – என்று ஈ.வெ.ரா. கோவை மாநாட்டில் தமது உரையில் தெரிவித்தார். 1.6.1949 தேதிய ‘விடுதலை’ இதழில் அந்தப் பேச்சு வெளியானது.

அந்தப் பேச்சுக்கு வலு தரும் விதமாக, ‘விளக்கம்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஈ.வெ.ரா. 19.6.1949 தேதி ‘விடுதலை’யில் கையொப்பமிட்டு எழுதினார்.

“இயக்க விஷயத்தில் எனக்கு, இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில், எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால், எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும் என்று அதிக கவலை கொண்டு இருக்கிறேன். இது பற்றி சி.ஆர்.(ராஜாஜி) அவர்களிடம் பேசினேன்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. கூறினார். அடுத்து ஈ.வெ.ரா. மற்றோர் அறிக்கையை வெளியிட்டார்.

“எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால், நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி, நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு, அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து, மற்றும் 4, 5 பேர்களைச் சேர்த்து இயக்க நடப்பிற்கும், பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பத்திரம் எழுதப்படவிருக்கிறது. அது சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று, நமது இஷ்டத்திற்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டது என்றோ, போய்விடும் என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மை ஆகும்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. எழுதி இருந்தார்.

‘அந்த அறிக்கையில், ‘சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தின் ரகசியத்தை அனைவரும் புரிந்து கொண்டார்கள். மணியம்மையைப் பெரியார் மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த வாசகத்தின் உண்மைப் பொருள் ஆகும்’ என்று, பல வருடங்களுக்குப் பிறகு, கருணாநிதி தமது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் எழுதி இருந்தார். 
28.6.1949 தேதிய ‘விடுதலை’யில் மற்றொரு விளக்க அறிக்கையை ஈ.வெ.ரா. எழுதி வெளியிட்டிருந்தார்.

“என்னிடம் அன்பும், எனது நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்றுப் புரட்சியாகவும், திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்து விடுமோ என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கு ஒரு கெட்ட பெயரும், இழிவும் ஏற்படக் கூடிய பெரிய தவறாகவும் கூடக் காணப்படுவதாகத் தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. குறிப்பிட்டிருந்தார்.

“என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும் ஓர் அளவுக்காவது இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் மிகக் கவலையுடனும், பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாகிறேன்” என்றும் அதில் எழுதி இருந்தார்.

மணியம்மையுடன் ஈ.வெ.ரா.வுக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்துக் கழகத் தோழர்களின் கவலையையும், வருத்தத்தையும் அகற்றும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கையை ஈ.வெ.ரா. வெளியிட்டார் என்று கருதலாம்.

அண்ணாதுரை கண்டனம்


1949-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் சந்திப்பு; 28.5.1949 அன்று கோவை மாநாட்டில் கேள்விகள்; பின்னர் ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு; 19.6.1949 ‘விடுதலை’யில் விளக்க அறிக்கை; பிறகு அந்த விளக்கத்திற்குப் பலம் தேட 28.6.1949 அன்று மற்றோர் விளக்க அறிக்கை – என்றெல்லாம் நிகழ்ந்து முடிந்ததும், திராவிடர் கழகத்தில் உள்ளபடியே ஒரு சுனாமி படு பயங்கரமாகத் தோன்றியது.

அப்போது ஈ.வெ.ரா.வுக்கு வயது 72; மணியம்மைக்கு வயது 26. 72 வயதுக் கிழவர், 26 வயது இளம் பெண்ணைத் திருமணம் என்ற பெயரில் சிதைத்து நாசமாக்கலாமா என்ற கேள்வி, கழக உறுப்பினர்களிடையே எழுந்தது.
அண்ணாதுரை 3.7.1949 தேதிய ‘திராவிட நாடு’ இதழில், ஈ.வெ.ரா.வின் இந்த அடாத நடவடிக்கை குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதினார். ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை; விரட்டப்படுகிறோம்’ – என்பது கட்டுரையின் தலைப்பு.

ஈ.வெ.ரா – மணியம்மை விவாகத்தைப் ‘பொருந்தாத் திருமணம்’ என்று அண்ணாதுரை விவரித்தார்.

“காமப்பித்து கொண்டு அலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே, வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மான ரோஷத்தில் அக்கறை உள்ள வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடம் தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளில் முழக்கம் இட்டவர் ஈ.வெ.ரா.” என்று சுட்டிக் காட்டிய அண்ணாதுரை, “இப்படிப்பட்ட அறிவுரையைப் புகட்டியவர், தமது 72-ஆம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர, வேறென்ன நிலைமை இருக்கும்!” என்று கேட்டார்.

சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, 72-க்கும் 26-க்கும் திருமணம் நடத்துகிறார்களே என்று கேலி பேசுவதைக் கேட்டு, நெஞ்சு வெடிப்பதாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

“முத்தம் இடவந்த குழந்தையின் மூக்கைக் கடித்து எறியும் தாயை நாங்கள் கண்டதில்லை. தந்தையே! நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து எங்கள் தன்மானத்தை அறுத்து எறிவது ஏன்? என்ன குற்றம் இழைத்தோம்? ஏன், என்றும் அழியாத அவமானத்தைத் தேடித் தருகிறீர்?” என்று அடுக் கடுக்கான கேள்விகளை ஈ.வெ.ரா.வை நோக்கி அண்ணாதுரை எழுப்பினார்.

“எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 – இதை மறுக்க முடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே” என்று அண்ணாதுரை சுட்டிக் காட்டினார்.

ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்வதற்கும், இயக்கப் பணி புரிவதற்கும் திராவிடர் கழகத்தில் பெண்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஈ.வெ.ரா.வின் சகோதரர் மகள்கள் – கிருஷ்ணசாமி நாயக்கரின் மகள் மிராண்டா சில மாநாடுகளில் கலந்து கொண்டு வேலை செய்தார். இவ்வாறு குடும்பப் பெண்களும், பிறரும் தயாராக இருந்த நிலையில் அவர்கள் யாருமே தேவைப்படவில்லை, மணியம்மை வர நேரிட்டது. அவர் கழகத்திற்குள் வந்ததும், ‘புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்; புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால்...’ என்று – அண்ணாதுரை, மணியம்மை பிரவேசித்தபோதே தாம் எதிர்த்ததை எடுத்துக் காட்டினார். 
மணியம்மை, ஈ.வெ.ரா.வின் வளர்ப்புப் பெண் என்று அறிமுகப் படுத்தப்பட்டார். அந்த வளர்ப்புப் பெண் இன்று ஈ.வெ.ரா.வின் மனைவி ஆகிறார் என்று கிண்டலுடனும், அண்ணாதுரை கூறினார்!

ஈ.வெ.ரா – மணியம்மை திருமண ஏற்பாடு திராவிடர் கழகத்தில் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது மாவட்ட அளவிலான பொறுப்புகளிலோ இருந்தவர்களில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்றது.

“முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் மற்றும் ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமான ஒருவராகிய சி.டி.டி.அரசு, ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாக இருந்த என்.வி.நடராசன், ஈ.வெ.ரா. அண்ணன் மகனாகிய ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி, பொருளாளர் கோவிந்தசாமி ஆகியவர்களில் எவருடனும் தமது திருமணம் குறித்து ஈ.வெ.ரா. பேசவில்லை; ஜாடைமாடையாகக் கூடப் பேசியதில்லை” என்று அண்ணாதுரை தமது கட்டுரையில் அம்பலப் படுத்தினார்.

இவர்களும், இவர்களைப் போன்ற பிறரும், ‘மோட்டாருக்குப் பெட்ரோல் வாங்கித் தருவது, ஆஃபீஸுக்குப் பேப்பர் வாங்குவது, நிதிக்குப் பணம் பெற்றுத் தருவது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே தேவைப்பட்டார்கள்’ என்றும், ‘இன்ன ஊரில், இன்ன இடத்தில் மாநாடு கூட்டு; அதற்கான ஏற்பாடு செய் என்று கூறிட மட்டுமே அவர்கள் தேவைப் பட்டார்கள்’ என்றும் கழக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதை, அண்ணாதுரை வலிமையாக சுட்டிக் காட்டினார்!

ஆதார நூல்கள் : 

1. பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள் - ‘திராவிட நாடு’ இதழ் கட்டுரைகளின் தொகுப்பு நூல். வெளியிட்டோர்: மீனா கோபால் பதிப்பகம், கதவு எண் 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88 (2000)

2. நெஞ்சுக்கு நீதி - கருணாநிதி - தினமணி கதிர் வெளியீடு, சென்னை-2. 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராஜாஜியுடன் ஈ.வே.ரா. பேசிய ரகசியம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராம.அரங்கண்ணல் கழகங்களில் ஒரு மூத்த உறுப்பினர். கருணாநிதி ஒரு பேச்சாளராக மட்டும் இருந்த காலத்திலேயே, அரங்கண்ணல் ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்தார். பிறகு ‘விடுதலை’ நாளிதழில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆரம்ப காலத்தில் அரங்கண்ணலுக்கு, அண்ணாதுரை மீது பற்றுக் கிடையாது. தமது நிலை சிறிது சிறிதாக மாறியதை, அவரே பின்னர் ‘திராவிடன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒப்புக் கொண்டார். (26.9.1956)

அரங்கண்ணல் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குடந்தை நகரில் திராவிடர் கழக உறுப்பினர்களின் கருப்புச் சட்டை மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மாநாட்டுக்குப் போய்விட்டு ஈ.வெ.ரா. திரும்பினார். மாநாடு எவ்வாறு நடந்தது என்று அரங்கண்ணல் ஆர்வத்துடன் விசாரித்தார்.

“பெரியார் சொன்ன முதல் வார்த்தையே, ‘நல்லா திட்டிப்போட்டேனுங்க! குள்ள நரிப்பசங்க...ன்னு சொல்லிப் போட்டேன். பின்னே என்னாங்க, ஏன் கருப்புச் சட்டை போடாமே, இந்த அண்ணாதுரை, சின்னதம்பியெல்லாம் மேடைக்கு வரணும்?’ என்பதுதான்” என்று அரங்கண்ணல் எழுதியிருக்கிறார்.

அந்நாட்களில் திராவிடர் கழக உறுப்பினர்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று ஈ.வெ.ரா. ஆணையிட்டிருந்தார். தம்மால் கருப்புச் சட்டை அணிய இயலாது என்று அண்ணாதுரை அந்த ஆணை வெளியானதுமே மறுத்து விட்டார். அவரைப் பின்பற்றி நெடுஞ்செழியன் முதலியவர்களும் கருப்புச் சட்டை போட மறுத்தார்கள்.

குடந்தை மாநாட்டில் அண்ணாதுரை கருப்புச் சட்டை போடாமல் மேடைக்கு வந்தார். ஈ.வெ.ரா.வுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மேடையிலேயே அண்ணாதுரையையும், மற்றவர்களையும் கடுமையாக ஏசிப் பேசிவிட்டார். தாம் அவ்வாறு செய்ததையே அரங்கண்ணலிடம் ஈ.வெ.ரா. தெரிவித்தார். 
அண்ணாதுரையின் பெயரை ‘அண்ணாதுரை, சின்னத்தம்பி’ என்று கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்ததைக் கவனிக்க வேண்டும்!

ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்ததால், அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்று அரங்கண்ணல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்போது சென்னையில் மே தின விழா நடந்தது. அதில் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அவரது அந்த உரையை என்.வி.நடராசன் அப்படியே எழுதி எடுத்துக் கொண்டு வந்தார். அதை, ஈ.வெ.ரா.வுக்குத் தெரியாமல் ‘விடுதலை’ நாளிதழில், ஒரு பிரமாதமான தலைப்பிட்டு அரங்கண்ணல் பிரசுரித்து விட்டார். அண்ணாதுரையின் உருவம் அடங்கிய ‘பிளாக்’கை ‘போர்வாள்’ அலுவலகத்திலிருந்து இரவலாக வாங்கி, கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டு விட்டார்கள்.

மறுநாள் அலுவலகத்திற்கு ஈ.வெ.ரா. வந்ததும், அண்ணாதுரையின் சொற்பொழிவு பிரசுரமான இதழைப் பார்த்துப் பெருங்கோபம் கொண்டார். “பெருமாள் சோத்தைத் தின்றுவிட்டு, பெருமாளுக்குத் துரோகம் செய்கின்றான்க!” என்று அரங்கண்ணலையும், விடுதலை அலுவலகத்தில் பணிபுரிந்த பூ.கணேசன் என்பவரையும் குறிப்பிட்டு ஈ.வெ.ரா. கொதிப்புடன் கூறினார்.

ஈ.வெ.ரா.வின் அறிக்கை


ந்தச் சொல் உள்ளபடியே, என் மனத்திலும், நண்பர் கணேசு மனத்திலும் ஆழப் பதிந்தது! நாங்கள் ஒன்றும் சோற்றுக்கு வீங்கிப் போய் ‘விடுதலை’க்குப் போகவில்லை! விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும், எங்களுடைய இல்லத்திலே தினசரி எத்தனை பேருக்குச் சோறு கிடைக்கிறது என்று. ஐயா(ஈ.வெ.ரா.) சொன்ன அந்த வாசகம், பெரியாருடைய மனத்தில், ‘தான்’ இருக்கிறதே ஒழிய ‘கழகம்’ இல்லை என்கிற உண்மையை உணர்த்திற்று” என்று அரங்கண்ணல் குறிப்பிட்டிருக்கிறார்.

“அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் மீது ஈ.வெ.ரா.வுக்கு ஓர் எரிச்சல் ஏற்பட்டு மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது” என்றும், “ஈ.வெ.ரா. கழகத்தைப் பொதுச் சொத்தாகக் கருதாமல், அதையும் ஒரு ஜமீன் போல எண்ணினார் என்பது மட்டும் என் போன்றோர்க்குத் தெளிவாகத் தெரிந்தது” என்றும் அரங்கண்ணல், தமது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். 
திராவிடர் கழகத்தில் இராம. அரங்கண்ணல் போன்றோர் மெல்ல மெல்ல ஈ.வெ.ரா.விடமிருந்து விலகி, அண்ணாதுரையை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ அலுவலக நிர்வாகியாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவூர் சர்மா என்பவரின் தோட்டத்தில் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த ஈ.வெ.ரா., ‘விடுதலை’யில் பிரசுரிப்பதற்காக ஒரு செய்தியைச் சம்பத்திற்கு அனுப்பினார்.

திராவிடர் கழகத்தில் இருந்த அழகிரி 28.3.1949 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் க.அன்பழகன், ஜனார்த்தனம், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ‘அழகிரியின் கடைசிக் காலத்தில் திராவிடர் கழகமும், ஈ.வெ.ரா.வும் அவரைச் சரிவரக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்’ என்று அன்பழகனும், கருணாநிதியும் பேசினார்கள் என்ற தகவல் மாவூரில் இருந்த ஈ.வெ.ரா.வை எட்டியது.

“அன்பழகனையும் கருணாநிதியையும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது” என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை ஒரு செய்தியாக வெளியிடுமாறு சம்பத்திற்கு ஈ.வெ.ரா. அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வெளியிட்டால் அன்பழகன், கருணாநிதி ஆகியோரின் பொதுவாழ்வு பாதிக்கப்படும் என்று கருதிய சம்பத், அது குறித்து ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமியுடன் பேசினார். பிறகு அண்ணாதுரைக்கு டெலிஃபோன் செய்து, செய்தியைப் போடுவது பற்றிக் கேட்டார்.

அண்ணாதுரையின் ஆலோசனைப்படி அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை. அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது என்று, குருசாமி சென்று ஈ.வெ.ரா.வைக் கேட்டு வருவது நல்லது என்ற அண்ணாதுரையின் யோசனைப்படி, குருசாமியை சம்பத் அனுப்பி வைத்தார்.

குருசாமியைப் பார்த்ததும் ஈ.வெ.ரா. கேட்ட முதல் கேள்வி, “என்ன, அந்தச் செய்தியைப் போட்டு விட்டீர்களா?” என்பதுதான். குருசாமி, “செய்தியை எப்படிப் போடுவது என்று கேட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூறினார். “செய்தியைப் போடுங்கள் என்றால், போட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எப்படிப் போடுவது என்று கேட்கக் கூடாது”என்று ஈ.வெ.ரா. சொல்லி அனுப்பினார்.

இந்த விவகாரம் பற்றிக் கருணாநிதி அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ தொடரிலும் குறிப்பிட்டிருக்கிறார். 
“பெரியாரின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் எந்தப் பதிலும் கூறாமல் இருந்து விட்டேன். எங்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் கூட்டத்திற்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள்” என்று கருணாநிதி எழுதியிருக்கிறார்.

(இந்த ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் ‘குமுதம்’ இதழில் கருணாநிதி எழுதியது ஆகும்.)

ரகசியப் பேச்சு

1949 மே மாதம் 14– ஆம் தேதியன்று, அப்பொழுது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை, திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. சந்தித்தார். அங்கு அவர் ராஜாஜியுடன் நீண்ட நேரம் பேசினார். ராஜாஜி – ஈ.வெ.ரா. சந்திப்பு பத்திரிகைகளில் வெளியாயிற்று.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களிடையே, அந்தச் சந்திப்பு ஒரு பெரிய கேள்விக்குறியையும், சலசலப்பையும் உண்டாக்கியது. சந்திப்பின் விவரங்களை அறிந்து கொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் முயன்றார்கள். ஆனால், அதுபற்றி ஒரு சிறிய செய்தியையும் ஈ.வெ.ரா. வெளியிடவில்லை.

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் திராவிடர் கழகம் மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. தினசரி காலையிலும், பகலிலும், மாலையிலும், இரவிலும் ராஜாஜியைப் பார்ப்பனர் என்று கூறித் திராவிடர் கழகத்தவர் ஏசிக் கொண்டிருந்த நேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா., திருவண்ணாமலைக்கே சென்று ராஜாஜியுடன் நீண்ட நேரம் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள, திராவிடர் கழகத்தவர் மிகவும் விரும்பினார்கள்.

28.5.1949 அன்று கோவையில் ஜி.டி.நாயுடு ஏற்பாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டார்கள். 
“ஈ.வெ.ரா.வும் ராஜாஜியும் சமீபத்தில் திருவண்ணாமலையில் சந்தித்தார்கள்; அது என்ன விஷயம் என்று இந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. எல்லோருக்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்” என்று ஜி.டி. நாயுடு பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு முன்பாகப் பேசிய அண்ணாதுரையும், இந்தக் கோரிக்கையை வெளியிட்டார்.

“அது முற்றிலும் எனது சொந்த விஷயம். அதுபற்றி மாநாட்டில் வெளியிட முடியாது” என்று ஈ.வெ.ரா. மிகுந்த கோபத்துடன் தமது உரையில் பதில் அளித்தார்!!

(தொடரும்) 

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா 
ழலை ஒழிக்க அன்னா ஹஸாரே குழுவினர் போராடி வருவதற்குச் சமமாக, அவர்களது உண்ணாவிரதத்தை ஒழிக்க மத்திய அரசும் தீவிரமாகப் போராடி வருகிறது. அதன் விளைவாக கால வரையற்ற உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு, 15 நாளைக்குள் முடித்துக் கொள்ளும் உண்ணாவிரதமாகச் சுருங்கியுள்ளது. இந்த சுமுக(!) உடன்பாட்டை எட்ட, இரு தரப்பினரும் எப்படி வாதம் செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறோம். 


கபில்சிபல் : இதோ பாருங்க. அநாவசியமா பிரச்சனை பண்ணாதீங்க. நாடு இருக்கிற நிலையிலே ஒரு நிமிஷம் உண்ணாவிரதம் இருக்கிறது கூட அரசியல் சட்டப்படி குற்றம். நாட்டுலே யாராவது சாப்பிடாம இருக்காங்களா? அவங்களுக்கெல்லாம் ஊழல் ஒழியணும்ங்கற எண்ணம் இல்லையா? அன்னா ஹஸாரே மட்டும் சாப்பிட மாட்டேன்னு ஏன் அராஜகம் பண்றாரு?

கெஜ்ரிவால் : நாட்டு மக்கள் ஆதரவோடத்தான் நாங்க இந்தப் போராட்டத்திலே இறங்கியிருக்கோம். ‘ஜன் லோக்பால்’ சட்டத்தை அரசு ஏற்கிற வரைக்கும் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்வார்.

சிதம்பரம் : நாங்களும் ஊழலை ஒழிக்கத்தான் பாடுபடறோம். அதனாலேதான் 2-ஜி ஊழல்லே கூட எங்களையும் மீறி சில பேர் கைதாகியிருக்காங்க. அதே வழிமுறையை நீங்களும் பின்பற்றலாமே?

சாந்தி பூஷண் : கடுமையான லோக்பால் சட்டம் வந்தாத்தான் ஊழலை ஒழிக்க முடியும். நாங்க என்ன வெளிநாட்டு பேங்குகளிலே பதுக்கியிருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கணும்னா உண்ணாவிரதம் இருக்கிறோம்? இனிமே நடக்கப் போற ஊழலைத் தடுக்கத்தானே சட்டம் கொண்டு வரணும்னு சொல்றோம்?

பிரணாப் முகர்ஜி : அன்னா ஹஸாரே நல்லா சாப்பிட்டு நூறு ஆண்டு காலம் ஊழலை எதிர்த்துப் போராடணும்ங்கறதுதான் எங்க ஆசை. அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும், இப்படி பொது இடத்திலே இருக்கிறது நியாயமா? வீட்டுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்க கூடாதா? லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு நியாயம். இவருக்கு ஒரு நியாயமா?

பிரசாந்த் பூஷண் : மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இப்படிப் போராடறோம்.

சிதம்பரம் : மக்கள் எதுவும் தெரியாம நிம்மதியா இருக்காங்க. அவங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, டென்ஷன் படுத்தணுமா? உண்ணா விரதத்துக்குப் பதிலா ‘உறங்காவிரதம்’ இருக்கட்டுமே. அரசு எந்தத் தடையும் பண்ணாது. 
கிரண்பேடி : உண்ணாவிரதம் காந்தி கடைப்பிடிச்ச வழிமுறை. அதனாலே அவர் வழியிலே...

கபில்சிபல் : என்ன காந்தி? நாங்க பார்க்காத காந்தியா? எங்க கட்சியிலேயே ரெண்டு மூணு காந்தி இருக்காங்க. அவங்க வழியிலே போகலாமே. சரி, அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் டென் டூ ஃபைவ் அடையாள உண்ணாவிரதம் இருக்கலாமே. அவ்வளவு ஏன்? கூச்சத்தை விட்டா அரைநாள் கூட போதும்.

சாந்தி பூஷண் : சீச்சீ... அதனாலே ஒரு பலனும் கிடைக்காது.

கபில்சிபல் : அப்ப தொடர் உண்ணாவிரதம் இருங்க. டெய்லி ஒருத்தர். எத்தனை வருஷம் வேணாலும் தொடரலாம். இதையெல்லாம் விட்டுட்டு, சாப்பிடவே மாட்டோம்னு அடாவடி பண்றாரே. ஒரு சட்டம் கொண்டு வர்றதுன்னா சும்மாவா? எத்தனை கட்சிகள் ரகளை பண்ணி, எத்தனை தடவை சபையை ஒத்தி வெச்சு நிறைவேத்தற விஷயம் தெரியுமா?

பிரணாப் முகர்ஜி : சட்டத்தை நிறைவேத்தறது பார்லிமென்டோட வேலை. நீங்களே சட்டத்தை கையிலே எடுத்துக்கிட்டு பேயாட்டம் ஆடறதுக்கு ஆட்சியையா பிடிச்சுட்டீங்க? பிடிவாதம் பிடிக்காம, காலாகாலத்திலே அன்னா ஹஸாரே சாப்பிடறதுக்கு வழியைப் பாருங்க.

சிதம்பரம் : ஒரு தேர்தல்லேயாவது ஜெயிக்க முடியுமா உங்களாலே? கோடிக்கணக்கிலே செலவு பண்ணி தேர்தலை சந்திச்சிருந்தா, அந்த நஷ்டத்தை ஈடுகட்டணுமேன்ற கவலை இருந்திருக்கும். இப்படிப் பொறுப்பில்லாம, ஊழல் எதிர்ப்புக் கூச்சல் போட மாட்டீங்க.

கெஜ்ரிவால் : எங்க மசோதா அமலுக்கு வந்தா, 65 சதவிகிதம் ஊழலை கேரண்டியா ஒழிக்க முடியும்னு ஹஸாரே சொல்றாரு.
கபில்சிபல் : ஊழலைப் பத்தி எங்களுக்குத் தெரியுமா? அவருக்குத் தெரியுமா? அவர் பேச்சை நம்பறீங்களே. 65 சதவிகிதம் ஊழலை ஒழிக்கிறது, பாதிக் கிணறு தாண்டற மாதிரி. அரைகுறை வேலை செய்யறதுக்கு செய்யாமலே இருக்கலாம். அதான் எங்க வழி.

கிரண்பேடி : ஊழலை ஒழிக்கணும்ன்ற சிந்தனையே இல்லாம இருக்கீங்களே.

கபில்சிபல் : இப்படி வாய் கிழியப் பேசறீங்களே. நான் கேக்கறேன். ‘ஸி.ஏ.ஜி. ஒழிப்பு மசோதா’ தயாரிச்சு அனுப்ப முடியுமா உங்களாலே? ஊழல் இந்த அளவு விஸ்வரூபம் எடுத்ததுக்கே ஸி.ஏ.ஜி.தானே காரணம்?

சாந்தி பூஷண் : நீங்க எங்க நோக்கத்தையே புரிஞ்சுக்காம பேசறீங்க. லட்சம் கோடி ரூபாய் ஊழலைக் கூட சாதாரணமா நினைக்கறீங்க.

சிதம்பரம் : அகலக் கால் வைக்காம, முதல்லே சின்னச் சின்ன ஊழலை ஒழிக்கப் போராடுங்களேன். ஆஸ்பத்திரியிலே ஆயா வாங்கற லஞ்சம், அரசாங்க ஆஃபீஸ்லே பியூன் வாங்கற லஞ்சம்னு எவ்வளவு இருக்குது? உங்க கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினா, நாங்க எங்க வேலையை ஃப்ரீயா கவனிக்க முடியுமில்லே?

கபில்சிபல் : அதை விடுங்க. நாங்க சாப்பாடு போட்டு பேட்டா கொடுத்து, கூட்டத்தைக் கூட்ட படாதபாடு படறோம். உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் வருது? இதுலேர்ந்தே நீங்க ஏதோ ஃப்ராடு பண்றீங்களோன்னு சந்தேகம் வருது.

பிரணாப் முகர்ஜி : அரசியல்லே இல்லாமயே கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது? அமெரிக்கா கொடுத்ததா? இல்லே, தீவிரவாதிகள் கொடுத்ததா 
சிதம்பரம் : உங்க முகங்களைப் பார்க்கும்போதே மோடி ஆளுங்களோன்னு சந்தேகம் வருது.

கபில்சிபல் : எதிர்ப்பு தெரிவிக்கறதுக்கும் ஒருமுறை இருக்குது. சைலண்டா மத்தவங்க காதுலே விழாதபடி எதிர்க்கணும். ஆனா நீங்க வெறி பிடிச்ச மாதிரி ஊழலை எதிர்க்கிறீங்க.

கெஜ்ரிவால் : நீங்க என்ன சொன்னாலும் சரி, கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம்.

கபில்சிபல் : என்ன பேசறீங்க நீங்க? உங்களுக்குத்தான் மூச்சு இருக்குதா? எங்களுக்கெல்லாம் இல்லையா? ஏதோ சில ஊழல்களைப் பத்தி அரைகுறையா தெரிஞ்சுகிட்டே இப்படி ஆத்திரப்படறீங்களே. முழு விவரமும் தெரிஞ்சுகிட்டு ஆட்சி நடத்தற எங்களுக்கு எப்படி இருக்கும்? நாங்க எப்பவாவது சாப்பிடறதை நிறுத்தியிருக்கோமா?

பிரணாப் முகர்ஜி : நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சறதாலே, உண்ணாவிரதத்தை அனுமதிச்சுத் தொலைக்கறதுன்னு முந்தா நாளே முடிவு பண்ணிட்டோம். மடமடன்னு ஒரு வாரத்துக்குள்ளே முடிக்கணும்.

சாந்தி பூஷண் : கட்டுப்படி ஆகாதுங்க. ஒரு மாசமாவது வேணும்.

சிதம்பரம்: சரி. உங்களுக்கும் வேணாம். எங்களுக்கும் வேணாம். 15 நாள்தான். அதுக்கு மேலேயும் உண்ணாவிரதம் தொடர்ந்தா, கடுமையான நிபந்தனைகள் பாயும். நிபந்தனைகளை டெல்லி போலீஸ் சொல்லும். கேட்டுக்குங்க. 
டெல்லி போலீஸ்: (1) யாரும் ஊழல் எதிர்ப்பு கோஷம் போடக் கூடாது. அது அரசாங்க விரோதச் செயலாகக் கருதப்படும். (2) 15 நாள்தான் உட்கார்ந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கலாம். அதற்கு பிறகு கூட்டத்தினர் எந்த நேரத்திலும் எழுப்பப்படலாம் என்பதால், அதற்கு வசதியாக நின்று கொண்டே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (3) போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், இதற்கு முன் எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை என்று கலெக்டரிடம் சர்டிஃபிகேட் பெற வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயையோ! லஞ்சம் கொடுக்காம கவர்மென்ட்லே சர்ட்டிஃபிகேட் வாங்க முடியாதே?

டெல்லி போலீஸ் : அது உங்க பிரச்சனை. (4) உண்ணாவிரதப் பந்தல்லே, ஊழல் எதிர்ப்பு சம்பந்தமாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது. அதுக்குப் பதிலா ராகுல், சோனியா கட்-அவுட் வெக்கலாம். (5) சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையைத் தவிர்க்க, உண்ணாவிரதம் இருக்கும் இடம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். (6) தினமும் ஒரு காங்கிரஸ் தலைவர் மேடைக்கு வந்து, உண்ணாவிரதத்துக்கு எதிராக வாழ்த்து தெரிவித்துப் பேசுவார்.

பிரசாந்த் பூஷண் : ஹா... காங்கிரஸ் தலைவரா? கோஷ்டி மோதல் நடக்குமே...?

டெல்லி போலீஸ் : கவலை வேண்டாம். கோஷ்டி மோதல் நடந்தாலும், நடக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும் போலீஸ் உடனடியாகச் செயல்பட்டு, கூட்டத்தைக் கலைத்துவிடும். (7) மத்திய அரசு காண்டீன் ஒன்று பந்தலின் நடுவில் அமைக்கப்படும். பிற்பகலில் ஒருமணி நேரம் லஞ்ச் பிரேக் விடவேண்டும். (8) பகலில் உண்ணாவிரதம் இருக்கத் தடையில்லை. இரவில் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டு மறுநாள் திரும்பி வரலாம். (9) உண்ணாவிரதப் பந்தலுக்கு 25 கி.மீ.க்கு வெளியேதான் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயோ... அங்கேயிருந்து நடந்து வரணுமா?

டெல்லி போலீஸ் : அவசியமில்லை. ஓடியும் வரலாம். (10) மாணவர்கள் காலாண்டுத் தேர்வுக்குப் படிக்கிற நேரம் என்பதால், மாலை 6 மணிக்கு மேல் மைக் வைக்கக் கூடாது. (11) சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக, பந்தலுக்கு அருகே எங்கும் டாய்லட் வசதி ஏற்படுத்த கூடாது. தேவைப்படுபவர்கள் பஸ் பிடித்து வெளியூர் செல்லத் தடையில்லை. (12) போராட்ட முடிவில் ‘ஊழல் ஒழிந்துவிட்டது’ என்று அறிவிக்க வேண்டும் 
கெஜ்ரிவால் : இந்த நிபந்தனைகளை மீறினா என்ன பண்ணுவீங்க?

கபில்சிபல்: அன்னா ஹஸாரேவை மறுபடியும் கைது பண்ணி, ரெண்டு நாள் கழிச்சு விடுதலை பண்ணிடுவோம். அவர் வெளியே வந்து மறுபடியும் புதுசா உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாம்.