Showing posts with label சத்யா. Show all posts
Showing posts with label சத்யா. Show all posts

Saturday, May 25, 2013

இரண்டாம் டெசோ

சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் படம் இரண்டாம் டெசோ.கலைஞர் கிரியேசன் சார்பில் மு.கருணாநிதி கதை வசனம் எழுதி இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ள இந்த படம் வசூலில் தோல்வி கண்டாலும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு திரைக்காவியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

படத்தின் கதை இதுதான்;-
சென்னையில் வாழும் ஹீரோ கருணாநிதி,திமுக என்ற வர்த்தக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.டெல்லியில் வசிக்கும் அவருடைய நண்பர்களான சோனியாவும்,மன்மோஹனும் காங்கிரஸ் என்ற வர்த்தக நிறுவனத்தை நடத்திவருகிறார்கள்.கருணாநிதியும்,அவருடைய டெல்லி நண்பர்களும் இணைந்து ஐக்கிய முற்போக்கு கம்பெனி என்ற வர்த்தக நிறுவனத்தை துவக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி பெரும் லாபம் குவிக்கிறார்கள்.

இப்படி இவர்களின் வியாபாரம் ஜரூராக போய்க்கொண்டிருக்கும் வேலையில் பக்கத்து தீவுநாடான இலங்கையில் ஒரு யுத்தம் மூள்கிறது.ராஜபக்சே என்பவரது கொலைப்படைகளும்,பிரபாகரன் என்பவரது கொலைப்படைகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடுகின்றன.ராஜபக்சே கருணாநிதியின் டெல்லி பார்ட்னர் சோனியாவின் நண்பராவார்.சோனியாவின் கணவர் ராஜீவ் என்பவரை பிரபாகரன் கொன்றுவிடுவதால் அவர் ராஜபக்சேயின் உதவியுடன் பிரபாகரனை ஒழிக்க முயல்கிறார்.

கடுமையான யுத்தத்தின் முடிவில் பிரபாகரனும்,அவரது கொலைப்படைகளும் ராஜபக்சேயின் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகின்றன.அப்போது ஏராளமான அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள்.இச்சம்பவத்தினால் தமிழ்நாட்டில் கருணாநிதியின் வர்த்தக நிறுவனம் மேல் மக்களுக்கு அதிருப்தியும்,கோபமும் ஏற்படுகிறது.இதை பயன்படுத்தி அவரது போட்டி நிறுவனமான அம்மா &சும்மா என்ற மற்றொரு கம்பெனிக்கு மக்களின் ஆதரவு பெருகுகிறது.

இதனால் கலக்கமடையும் கதாநாயகன் கருணாநிதி மக்களின் ஆதரவை திரும்பபெறவும்,இழந்த நற்பெயரை மீட்கவும் "இரண்டாம் டெசோ"என்ற அமைப்பை உருவாக்குகிறார். தனது டெல்லி நண்பர்களோடு புதிய "வர்த்தக பேரங்களை"நடத்தி,அதன் மூலமாக எவ்வாறு தனது நிறுவனத்தை அவர் மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்புகிறார் என்பதை சுவாரஸ்யமாய் காட்டுகிறது இந்த இரண்டாம் டெசோ திரைப்படம்.

படத்தின் ஆரம்பமே போர்கள காட்சிதான்.இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இந்த காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.ராஜபக்சேவும்,அவரது தம்பி கோத்தபையாவும் ஏராளமான ஆயுதங்களுடன் பிரபாகரனின் கொலைப்படைகளை தாக்க,பிரபாகரனின் படைகள் வீராவேசத்தோடு பாய்ந்து சென்று அப்பாவி தமிழர்களின் முதுகுகளுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் காட்சி பிரமிப்பூட்டுகிறது.இறுதியில்,கொடியவன் கோத்தபைய்யா அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றதும் முதுகின் பின்னாலிருந்து வெளிவரும் பிரபாகரன் படையினர் "நாங்கள் சரணடைகிறோம்.எங்களை கொன்றுவிடாதீர்கள்"என்று போர்குணத்தோடு கண்களில் நீர் மல்க கெஞ்சும் காட்சி கல் மனதையும் கலங்க வைக்கிறது.அவர்களின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் கொலைவெறியன் கோத்தபையா ,சின்னஞ்சிறுவர்கள் என்றும் பாராமல் பிரபாகரனின் கொலைப்படைகளை ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லும் காட்சியில் நம் கண்கள் குளமாகின்றன.பிரபாகரனின் சடலத்தை காட்டும் காட்சியில் அவர் முன்பொருமுறை பேசிய "நானும்,ராஜபக்சேவும் சகோதரர்கள்.எங்கள் பிரச்னையில் தலையிட எந்த நாயுக்கும் உரிமையில்லை"என்ற வார்த்தைகள் பின்னணியில் ஒலிப்பது "டைரக்டர் டச்"!!!

தனது நண்பன் பிரபாகரன் இறந்த தகவல் கிடைத்தாலும் வர்த்தக நலன் கருதி அதை நம்ப மறுக்கும் காட்சியில் கருணாநிதியின் நடிப்பு சற்று நாடகத்தனமாக அமைந்திருக்கிறது.இரங்கல் கவிதை வாசித்தால் டெல்லி வியாபாரம் பாதிக்கும் என்ற காரணத்தால் நான்கு சுவர்களுக்குள் அவர் அழுது புலம்பும் காட்சியும் நாடகத்தனமே.ஹீரோவுக்குரிய எந்த சாகசமும் செய்யாமல் குடும்பநலன் கருதி அடக்கி வாசிக்கிறார் கருணாநிதி.

ஹீரோ டம்மியாக போனாலும் காமெடி காட்சிகள் படத்திற்கு தோள் கொடுக்கின்றன.காமெடியன்களாக ஹீரோவுடன் வலம்வரும் வீரமணியும்,திருமாவளவனும் தேர்ந்த நகைச்சுவை நடிகர்களாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.வீரமணி அந்த கால நகைச்சுவை நடிகர் ஈ.வே.ராமசாமி பாணியில் தொட்டதற்க்கெல்லாம் "பார்ப்பன சதி"என்று கூறி குபீர் சிரிப்பை வரவைக்கிறார்.தூங்கிகொண்டிருக்கும் வீரமணியை திருமா எழுப்ப,"என்ன....?அதுக்குள்ள விடிஞ்சுருச்சா ?எல்லாம் பார்ப்பன சதி"என்று சொல்லும் காட்சியிலாகட்டும்,பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கும்போது திடீரென்று வண்டி நிற்க ,வீரமணி எழுந்து "என்ன...பஸ் ப்ரேக் டவுனா..?எல்லாம் பார்ப்பன சதி"என்று வசனம் பேசும் காட்சியிலாகட்டும் ,சும்மா சொல்லக்கூடாது....வீரமணி அடிக்கும் லூட்டியில் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது."தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்கா விட்டால் ஆபிரகாம் லிங்கனே ஆடு,மாடுதான் மேய்த்து கொண்டிருந்திருப்பார்" என்று அவர் அடிக்கும் "விட்"டில் சிரித்து,சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறது.

ஒருபுறம் வீரமணி எவர்க்ரீன் காமெடியில் பட்டையை கிளப்ப,மற்றொருபுறம் திருமா க்ளாஸிக் காமெடியில் கலக்குகிறார்.தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் பயணித்து ராஜபக்சேவை "கொலைகாரன்"என்று வசைபாடும் போதும் ,திமுக வர்த்தக குழுவோடு கொழும்பில் ராஜபக்சேவை சந்திக்கும்போது வாயெல்லாம் பல்லாக அவரோடு சிரித்து உரையாடும்போதும் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார் திருமா.

ராஜபக்சேயிடம் விடைபெற்று கிளம்பும் நேரத்தில் "இப்ப போறேன்.ஆனா..திரும்பி....( சற்று இடைவெளிவிட்டு)..வரமாட்டேன்னு சொல்லவந்தேன்"என்று ஜகா வாங்கும்போது திருமாவின் முகபாவனையை பார்த்து சிரிக்காதவர்களே இருக்கமுடியாது.

கருணாநிதியின் டில்லி பார்ட்னர்களாக வரும் சோனியாவும்,மன்மோகனும் தங்களின் மர்ம நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.கருணாநிதி இருவருக்கும் சளைக்காமல் கடிதம் எழுதுவதும்,ஒவ்வொரு முறையும் "நானும் கவலைப்படுகிறேன்"என்று பதில் கடிதத்தை மன்மோகன் எழுதுவதும் படம் நெடுக இடம்பெறுவது பெரும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

பின்னணி இசையில் கருணாநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் நாகூர் ஹனீபாவின் "சோனியாவிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை"என்ற பாடல் ரசிக்கவைக்கிறது.

இறுதி காட்சியில் கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கம்பெனியில் இருந்து விலகுவதாக அறிவிப்பது சற்று நாடகத்தனமாக அமைந்துவிட்டது.எனினும்,இரண்டாம் டெசோ படத்தின் முதல் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த பாகத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

மொத்தத்தில் கருணாநிதியின் சமீபத்திய தோல்வி படவரிசையில் "இரண்டாம் டெசோ" -வும் ஒரு படுதோல்வி "மொக்க" படமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!!!.

Thursday, November 22, 2012

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா


[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] 

துரைமுருகன்: 
ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.

அன்பழகன்:
அம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! கழகம் ஆட்சியிலே இருந்தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா?

வீரமணி:
எதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா? இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது? இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.

ஆற்காடு வீராசாமி:
சரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்? ஆரம்பத்திலேர்ந்து சொல்லுங்க.

ஸ்டாலின்:
வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.

துரைமுருகன்:
அப்பாடா! அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.

ஆற்காடு வீராசாமி:
பின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா? கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்? ம்.. அப்புறம்?

ஸ்டாலின்:
டேக் யுவர் ஸீட்ன்னாரு.

பாலு:
சரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.

அன்பழகன்:
அப்புறம்? கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே?

ஸ்டாலின்:
ஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.

துரைமுருகன்:
ஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.

கருணாநிதி:
மனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா?

பாலு:
நாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.

கருணாநிதி:
நான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்?

ஸ்டாலின்:
எதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்கும் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.

பாலு:
இலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார். 

கருணாநிதி:
இலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்?

வீரமணி:
சொல்றதுக்கு என்ன இருக்கிது? இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம்? ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா?

பாலு:
சொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.

ஆற்காடு வீராசாமி:
ஓ! பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா? கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா?

பாலு:
ஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.

ஸ்டாலின்:
ஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.

அன்பழகன்:
ஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.

துரைமுருகன்:
சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா?

பாலு:
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.

துரைமுருகன்:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

பாலு:
தலையாட்டினார்.

ஆற்காடு வீராசாமி:
ஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட்டுத்தான் தலையாட்டுவாங்க.

ஸ்டாலின்:
லண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.

துரைமுருகன்:
பேசி முடிச்சதுக்கா?

ஸ்டாலின்:
ஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.

பாலு:
எங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.

வீரமணி:
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா? 

ஸ்டாலின்:
சொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.

கருணாநிதி:
ரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா?

ஸ்டாலின்:
அதான் உங்க கிட்டே சொல்றோமே.

கருணாநிதி:
சரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா?

பாலு:
சொல்லாம இருப்போமா? அதுக்குத்தானே போனோம்? அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.

அன்பழகன்:
அதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது?

பாலு:
கடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.

கருணாநிதி:
வேறே ஒண்ணும் கேக்கலையா?

ஸ்டாலின்:
உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.

அன்பழகன்:
எனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.

கருணாநிதி:
தீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.

Wednesday, January 11, 2012

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா 
ழலை ஒழிக்க அன்னா ஹஸாரே குழுவினர் போராடி வருவதற்குச் சமமாக, அவர்களது உண்ணாவிரதத்தை ஒழிக்க மத்திய அரசும் தீவிரமாகப் போராடி வருகிறது. அதன் விளைவாக கால வரையற்ற உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு, 15 நாளைக்குள் முடித்துக் கொள்ளும் உண்ணாவிரதமாகச் சுருங்கியுள்ளது. இந்த சுமுக(!) உடன்பாட்டை எட்ட, இரு தரப்பினரும் எப்படி வாதம் செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறோம். 


கபில்சிபல் : இதோ பாருங்க. அநாவசியமா பிரச்சனை பண்ணாதீங்க. நாடு இருக்கிற நிலையிலே ஒரு நிமிஷம் உண்ணாவிரதம் இருக்கிறது கூட அரசியல் சட்டப்படி குற்றம். நாட்டுலே யாராவது சாப்பிடாம இருக்காங்களா? அவங்களுக்கெல்லாம் ஊழல் ஒழியணும்ங்கற எண்ணம் இல்லையா? அன்னா ஹஸாரே மட்டும் சாப்பிட மாட்டேன்னு ஏன் அராஜகம் பண்றாரு?

கெஜ்ரிவால் : நாட்டு மக்கள் ஆதரவோடத்தான் நாங்க இந்தப் போராட்டத்திலே இறங்கியிருக்கோம். ‘ஜன் லோக்பால்’ சட்டத்தை அரசு ஏற்கிற வரைக்கும் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்வார்.

சிதம்பரம் : நாங்களும் ஊழலை ஒழிக்கத்தான் பாடுபடறோம். அதனாலேதான் 2-ஜி ஊழல்லே கூட எங்களையும் மீறி சில பேர் கைதாகியிருக்காங்க. அதே வழிமுறையை நீங்களும் பின்பற்றலாமே?

சாந்தி பூஷண் : கடுமையான லோக்பால் சட்டம் வந்தாத்தான் ஊழலை ஒழிக்க முடியும். நாங்க என்ன வெளிநாட்டு பேங்குகளிலே பதுக்கியிருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கணும்னா உண்ணாவிரதம் இருக்கிறோம்? இனிமே நடக்கப் போற ஊழலைத் தடுக்கத்தானே சட்டம் கொண்டு வரணும்னு சொல்றோம்?

பிரணாப் முகர்ஜி : அன்னா ஹஸாரே நல்லா சாப்பிட்டு நூறு ஆண்டு காலம் ஊழலை எதிர்த்துப் போராடணும்ங்கறதுதான் எங்க ஆசை. அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும், இப்படி பொது இடத்திலே இருக்கிறது நியாயமா? வீட்டுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்க கூடாதா? லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு நியாயம். இவருக்கு ஒரு நியாயமா?

பிரசாந்த் பூஷண் : மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இப்படிப் போராடறோம்.

சிதம்பரம் : மக்கள் எதுவும் தெரியாம நிம்மதியா இருக்காங்க. அவங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, டென்ஷன் படுத்தணுமா? உண்ணா விரதத்துக்குப் பதிலா ‘உறங்காவிரதம்’ இருக்கட்டுமே. அரசு எந்தத் தடையும் பண்ணாது. 
கிரண்பேடி : உண்ணாவிரதம் காந்தி கடைப்பிடிச்ச வழிமுறை. அதனாலே அவர் வழியிலே...

கபில்சிபல் : என்ன காந்தி? நாங்க பார்க்காத காந்தியா? எங்க கட்சியிலேயே ரெண்டு மூணு காந்தி இருக்காங்க. அவங்க வழியிலே போகலாமே. சரி, அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் டென் டூ ஃபைவ் அடையாள உண்ணாவிரதம் இருக்கலாமே. அவ்வளவு ஏன்? கூச்சத்தை விட்டா அரைநாள் கூட போதும்.

சாந்தி பூஷண் : சீச்சீ... அதனாலே ஒரு பலனும் கிடைக்காது.

கபில்சிபல் : அப்ப தொடர் உண்ணாவிரதம் இருங்க. டெய்லி ஒருத்தர். எத்தனை வருஷம் வேணாலும் தொடரலாம். இதையெல்லாம் விட்டுட்டு, சாப்பிடவே மாட்டோம்னு அடாவடி பண்றாரே. ஒரு சட்டம் கொண்டு வர்றதுன்னா சும்மாவா? எத்தனை கட்சிகள் ரகளை பண்ணி, எத்தனை தடவை சபையை ஒத்தி வெச்சு நிறைவேத்தற விஷயம் தெரியுமா?

பிரணாப் முகர்ஜி : சட்டத்தை நிறைவேத்தறது பார்லிமென்டோட வேலை. நீங்களே சட்டத்தை கையிலே எடுத்துக்கிட்டு பேயாட்டம் ஆடறதுக்கு ஆட்சியையா பிடிச்சுட்டீங்க? பிடிவாதம் பிடிக்காம, காலாகாலத்திலே அன்னா ஹஸாரே சாப்பிடறதுக்கு வழியைப் பாருங்க.

சிதம்பரம் : ஒரு தேர்தல்லேயாவது ஜெயிக்க முடியுமா உங்களாலே? கோடிக்கணக்கிலே செலவு பண்ணி தேர்தலை சந்திச்சிருந்தா, அந்த நஷ்டத்தை ஈடுகட்டணுமேன்ற கவலை இருந்திருக்கும். இப்படிப் பொறுப்பில்லாம, ஊழல் எதிர்ப்புக் கூச்சல் போட மாட்டீங்க.

கெஜ்ரிவால் : எங்க மசோதா அமலுக்கு வந்தா, 65 சதவிகிதம் ஊழலை கேரண்டியா ஒழிக்க முடியும்னு ஹஸாரே சொல்றாரு.
கபில்சிபல் : ஊழலைப் பத்தி எங்களுக்குத் தெரியுமா? அவருக்குத் தெரியுமா? அவர் பேச்சை நம்பறீங்களே. 65 சதவிகிதம் ஊழலை ஒழிக்கிறது, பாதிக் கிணறு தாண்டற மாதிரி. அரைகுறை வேலை செய்யறதுக்கு செய்யாமலே இருக்கலாம். அதான் எங்க வழி.

கிரண்பேடி : ஊழலை ஒழிக்கணும்ன்ற சிந்தனையே இல்லாம இருக்கீங்களே.

கபில்சிபல் : இப்படி வாய் கிழியப் பேசறீங்களே. நான் கேக்கறேன். ‘ஸி.ஏ.ஜி. ஒழிப்பு மசோதா’ தயாரிச்சு அனுப்ப முடியுமா உங்களாலே? ஊழல் இந்த அளவு விஸ்வரூபம் எடுத்ததுக்கே ஸி.ஏ.ஜி.தானே காரணம்?

சாந்தி பூஷண் : நீங்க எங்க நோக்கத்தையே புரிஞ்சுக்காம பேசறீங்க. லட்சம் கோடி ரூபாய் ஊழலைக் கூட சாதாரணமா நினைக்கறீங்க.

சிதம்பரம் : அகலக் கால் வைக்காம, முதல்லே சின்னச் சின்ன ஊழலை ஒழிக்கப் போராடுங்களேன். ஆஸ்பத்திரியிலே ஆயா வாங்கற லஞ்சம், அரசாங்க ஆஃபீஸ்லே பியூன் வாங்கற லஞ்சம்னு எவ்வளவு இருக்குது? உங்க கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினா, நாங்க எங்க வேலையை ஃப்ரீயா கவனிக்க முடியுமில்லே?

கபில்சிபல் : அதை விடுங்க. நாங்க சாப்பாடு போட்டு பேட்டா கொடுத்து, கூட்டத்தைக் கூட்ட படாதபாடு படறோம். உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் வருது? இதுலேர்ந்தே நீங்க ஏதோ ஃப்ராடு பண்றீங்களோன்னு சந்தேகம் வருது.

பிரணாப் முகர்ஜி : அரசியல்லே இல்லாமயே கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது? அமெரிக்கா கொடுத்ததா? இல்லே, தீவிரவாதிகள் கொடுத்ததா 
சிதம்பரம் : உங்க முகங்களைப் பார்க்கும்போதே மோடி ஆளுங்களோன்னு சந்தேகம் வருது.

கபில்சிபல் : எதிர்ப்பு தெரிவிக்கறதுக்கும் ஒருமுறை இருக்குது. சைலண்டா மத்தவங்க காதுலே விழாதபடி எதிர்க்கணும். ஆனா நீங்க வெறி பிடிச்ச மாதிரி ஊழலை எதிர்க்கிறீங்க.

கெஜ்ரிவால் : நீங்க என்ன சொன்னாலும் சரி, கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம்.

கபில்சிபல் : என்ன பேசறீங்க நீங்க? உங்களுக்குத்தான் மூச்சு இருக்குதா? எங்களுக்கெல்லாம் இல்லையா? ஏதோ சில ஊழல்களைப் பத்தி அரைகுறையா தெரிஞ்சுகிட்டே இப்படி ஆத்திரப்படறீங்களே. முழு விவரமும் தெரிஞ்சுகிட்டு ஆட்சி நடத்தற எங்களுக்கு எப்படி இருக்கும்? நாங்க எப்பவாவது சாப்பிடறதை நிறுத்தியிருக்கோமா?

பிரணாப் முகர்ஜி : நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சறதாலே, உண்ணாவிரதத்தை அனுமதிச்சுத் தொலைக்கறதுன்னு முந்தா நாளே முடிவு பண்ணிட்டோம். மடமடன்னு ஒரு வாரத்துக்குள்ளே முடிக்கணும்.

சாந்தி பூஷண் : கட்டுப்படி ஆகாதுங்க. ஒரு மாசமாவது வேணும்.

சிதம்பரம்: சரி. உங்களுக்கும் வேணாம். எங்களுக்கும் வேணாம். 15 நாள்தான். அதுக்கு மேலேயும் உண்ணாவிரதம் தொடர்ந்தா, கடுமையான நிபந்தனைகள் பாயும். நிபந்தனைகளை டெல்லி போலீஸ் சொல்லும். கேட்டுக்குங்க. 
டெல்லி போலீஸ்: (1) யாரும் ஊழல் எதிர்ப்பு கோஷம் போடக் கூடாது. அது அரசாங்க விரோதச் செயலாகக் கருதப்படும். (2) 15 நாள்தான் உட்கார்ந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கலாம். அதற்கு பிறகு கூட்டத்தினர் எந்த நேரத்திலும் எழுப்பப்படலாம் என்பதால், அதற்கு வசதியாக நின்று கொண்டே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (3) போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், இதற்கு முன் எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை என்று கலெக்டரிடம் சர்டிஃபிகேட் பெற வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயையோ! லஞ்சம் கொடுக்காம கவர்மென்ட்லே சர்ட்டிஃபிகேட் வாங்க முடியாதே?

டெல்லி போலீஸ் : அது உங்க பிரச்சனை. (4) உண்ணாவிரதப் பந்தல்லே, ஊழல் எதிர்ப்பு சம்பந்தமாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது. அதுக்குப் பதிலா ராகுல், சோனியா கட்-அவுட் வெக்கலாம். (5) சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையைத் தவிர்க்க, உண்ணாவிரதம் இருக்கும் இடம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். (6) தினமும் ஒரு காங்கிரஸ் தலைவர் மேடைக்கு வந்து, உண்ணாவிரதத்துக்கு எதிராக வாழ்த்து தெரிவித்துப் பேசுவார்.

பிரசாந்த் பூஷண் : ஹா... காங்கிரஸ் தலைவரா? கோஷ்டி மோதல் நடக்குமே...?

டெல்லி போலீஸ் : கவலை வேண்டாம். கோஷ்டி மோதல் நடந்தாலும், நடக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும் போலீஸ் உடனடியாகச் செயல்பட்டு, கூட்டத்தைக் கலைத்துவிடும். (7) மத்திய அரசு காண்டீன் ஒன்று பந்தலின் நடுவில் அமைக்கப்படும். பிற்பகலில் ஒருமணி நேரம் லஞ்ச் பிரேக் விடவேண்டும். (8) பகலில் உண்ணாவிரதம் இருக்கத் தடையில்லை. இரவில் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டு மறுநாள் திரும்பி வரலாம். (9) உண்ணாவிரதப் பந்தலுக்கு 25 கி.மீ.க்கு வெளியேதான் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயோ... அங்கேயிருந்து நடந்து வரணுமா?

டெல்லி போலீஸ் : அவசியமில்லை. ஓடியும் வரலாம். (10) மாணவர்கள் காலாண்டுத் தேர்வுக்குப் படிக்கிற நேரம் என்பதால், மாலை 6 மணிக்கு மேல் மைக் வைக்கக் கூடாது. (11) சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக, பந்தலுக்கு அருகே எங்கும் டாய்லட் வசதி ஏற்படுத்த கூடாது. தேவைப்படுபவர்கள் பஸ் பிடித்து வெளியூர் செல்லத் தடையில்லை. (12) போராட்ட முடிவில் ‘ஊழல் ஒழிந்துவிட்டது’ என்று அறிவிக்க வேண்டும் 
கெஜ்ரிவால் : இந்த நிபந்தனைகளை மீறினா என்ன பண்ணுவீங்க?

கபில்சிபல்: அன்னா ஹஸாரேவை மறுபடியும் கைது பண்ணி, ரெண்டு நாள் கழிச்சு விடுதலை பண்ணிடுவோம். அவர் வெளியே வந்து மறுபடியும் புதுசா உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாம். 

Thursday, August 6, 2009

Sunday, May 10, 2009

ELECTION EXAMS


Wednesday, May 6, 2009

Monday, April 20, 2009

சத்யா






Thursday, March 19, 2009

Sunday, March 1, 2009

SATHYA PARODY


Wednesday, February 25, 2009

Tuesday, February 24, 2009

TAMILNADU ASSEMBLY BUDGET SESSION-2009

GET READY FOR A RIB-TICKLING PARODY BY SATHYA ON THE BUDGET SESSION.


Sunday, December 14, 2008






Saturday, December 6, 2008

facts are weird than fiction!!!

துக்ளக்-ல எவ்வளவு தான் கேவலமா கிண்டல் பண்ணாலும் அதை விட கேவலமா நடந்துக்கறது நம்ம அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை.

அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த கார்ட்டூன்.



Wednesday, December 3, 2008



Monday, November 24, 2008

thuglak cartoon

Sunday, November 23, 2008

Saturday, November 15, 2008

thuglak cartoon

Friday, November 14, 2008

sathya parody