Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Saturday, April 7, 2012

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

திராவிட மாயை – ஒரு பார்வை -


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம். 

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிட இயக்க நூற்றாண்டுத் துவக்க விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, ‘திராவிட’ என்ற சொல்லை தானோ, பேராசிரியர் அன்பழகனோ உருவாக்கவில்லை என்றார். இந்திய நாட்டின் தேசிய கீதம் ‘ஜன கண மன’ என்ற பாடலை எழுதிய ரபீந்த்ரநாத் தாகூர் ‘திராவிட உத்கல வங்கா’ என்று எழுதியிருப்பதை அவர் சுட்டிக் காட்டியபோது, அங்கிருந்த உடன்பிறப்புகள் ஆர்ப்பரித்தார்கள். திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, இந்த மண்ணில் திராவிடம் என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீவேதாந்த தேசிகர், ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி, இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவுபட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல்தான். இந்த இயக்கங்களின் அடிப்படையான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம் கால்டுவெல்லின் கற்பனையில் உருவானதுதான்.... மொழி உணர்வு என்பது ஒற்றுமைக்குப் பயன்பட வேண்டும். அதை வேற்றுமைக்கெனப் பயன்படுத்தியதுதான் கழகத்தவர்களின் சாதனை. திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழாவில் கருணாநிதி, உ.வே.சாமிநாத ஐயரைச் சுட்டிக் காட்டினார். ஆனால், மொழி உணர்வு பற்றி, உ.வே.சா. கூறியதைப் பார்க்கலாம்:

1937-ஆம் வருடம் நடந்த இந்திய இலக்கியக் கழகத்தின் முதல் மாநாட்டில், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்த உரையில் “இந்த பாரதீய சாகித்ய பரிஷத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது! இதன் முயற்சிகளால் குறுகிய நோக்கங்களும், சிறு வேறுபாடுகளும் ஒழிந்து தமிழர்களுள் ஒற்றுமை, திராவிட பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை, பாரதீய பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை ஆகிய மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டாகுமென்றே நம்புகிறேன்” என்றார்.

இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும், அதற்கு மொழி உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைந்த தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை, தமிழர் பண்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம். தகர டப்பாவில் தாரை நிரப்பிக் கொண்டு, மொழிகளுக்கிடையே பகைமையை மூட்டிய கழகத்தவரின் செயலை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆரிய திராவிட இன வேறுபாடு என்ற கோட்பாடு, வரலாற்று ஆய்வாளர்களால் கைவிடப்பட்ட விஷயம். அதை தி.மு.க. மேடைகளில் தொடர்ந்து பேசுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று. சென்ற மாதம் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நடந்த ‘உயிரியல் தொழில் நுட்பத்தின் எல்லைகள்’ என்ற கருத்தரங்கில், காசி ஹிந்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் லால்ஜி சிங் பேசினார். ..



பள்ளிக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிற ஆரியப் படையெடுப்பு என்ற கருத்துக்கு அடிப்படையே இல்லை. இன்றைய இந்தியர்கள் அனைவருமே கலப்பினம்தான் என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரியரும் திராவிடரும் ஒரே பண்பாட்டின் பிரதிநிதிகள்” என்றார் அவர். பல்கலைக் கழக கருத்தரங்கில் மட்டும் பேசப்பட்ட கருத்து அல்ல இது. தி.மு.க. ஆட்சியின்போது நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா சிறப்புரையாற்றினார். “தெற்காசியாவின் பண்பாடும் கலாசாரமும் வட இந்தியர்களாலும், திராவிட மொழி பேசும் தென்னிந்தியர்களாலும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர். நாடு பிடிக்கும் ஆசைக்காகவும், மத மாற்ற லாபங்களுக்காகவும் தயாரிக்கப்பட்டதுதான் ஆரிய - திராவிட இன வாதம் என்ற நாடகம். இந்த நாடகம், அரிதாரம் வாங்கக் காசில்லாமல், அவையோர் எவருமில்லாமல் இழுத்து மூடப்பட்டு விட்டது. கலைஞர் மட்டும் பழைய வசனங்களையே பேசிக் கொண்டிருக்கிறார். கழகத்தவர் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். .


.courtesy:Thuglak

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

திராவிட மாயை – ஒரு பார்வை -


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம். 

DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

நீதிக் கட்சியின் தோற்றத்திற்குக் காரணம், 1916- ஆம் ஆண்டு நடந்த தேர்தல் என்பதையும், தோல்வி அடைந்தவர்கள் பிராமண எதிர்ப்பைக் கொள்கையாக வகுத்துக் கொண்டார்கள் என்பதையும் முந்தைய இதழில் பார்த்தோம். 

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இன்னொரு இயக்கமும் துவக்கப்பட்டது. அது தனித் தமிழ் இயக்கம். திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தனித் தமிழ் இயக்கமும் ஒரு காரணியாக இருந்தது. எனவே, தனித் தமிழ் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். 

தமிழ், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலவராக இருந்தவர் ஸ்வாமி வேதாசலம். இவர் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மொழியை ஸம்ஸ்க்ருதச் சார்பில்லாமல் தனித்து இயங்கச் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். மறைமலை அடிகள் உருவாக்கியதுதான் தனித் தமிழ் இயக்கம். 

துவக்கத்தில், தனித் தமிழ் இயக்கம், நீதிக்கட்சிக்காரர்களோடு முரண்பட்டு இருந்தது. தமிழர்களுடைய கடவுள் சிவன்; தமிழர் சமயம் ஹிந்து சமயத்தைவிடத் தொன்மையானது என்று மறைமலை அடிகள் பேசி வந்தார். பிராமணர் அல்லாதாரை மறைமலை அடிகள் கடத்திக் கொண்டு போய் விடுவாரோ என்று நீதிக்கட்சிக்காரர்கள் பயந்து விட்டார்கள். தவிர, நீதிக்கட்சிக்காரர்களுக்கு ‘திராவிட’ என்று சொல்லிக் கொள்ள வேண்டி நிர்பந்தம் இருந்தது. நீதிக்கட்சித் தலைமையும் தமிழ் அல்லாதாரிடம் சிக்கியிருந்தது. மறைமலை அடிகளுக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே காரசாரமாக அறிக்கைகள் பறந்தன. கருத்து மோதல் ஏற்பட்டு கைகலப்பு, கலவரம் என்று தொடர்ந்தது. நீதிக்கட்சிக்காரர்களிடம் இருந்த புஜபலம் மறைமலை அடிகளிடம் இல்லை. நாளடைவில் அவருடைய குரல் வலுவிழந்தது. தனித் தமிழ் இயக்கத்தை திராவிட இயக்கம் கபளீகரம் செய்தது. 

மறைமலை அடிகளின் முயற்சி எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைப் பார்த்தாலே போதும். பொதுவுடமையாளர் ஜீவா, மறைமலை அடிகளை நம்பி ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால், மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா, தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக் கொண்டிருந்தார். மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா. வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா. யோசித்தபடியே உள்ளே சென்றார். மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச் சொல்லா?’ என்று கேட்டு விட்டார். ‘காரணம் என்பது எந்த மொழிச் சொல் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார். 

மறைமலை அடிகளின் வீட்டை விட்டு வெளியே வந்த ஜீவா, ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறி விட்டார். அடுத்து, தமிழில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி, பண்டித மணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம். 

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது,‘சங்க நூல்கள் எல்லாம் தனித் தமிழ் நூல்கள்; அவை ஸம்ஸ்க்ருதக் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார். பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக, ‘கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார். அடிகளார் அடங்குவதாக இல்லை. தேவார, திருவாசகங்கள் தனித் தமிழில் ஆக்கப்பட்டதென்று கூறினார். 

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் முதல் பதிகத்தில் ‘சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் ஸ்ம்ஸ்க்ருதச் சொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார். அடிகளாருக்குக் கோபம் வந்து விட்டது; கோபமாக மேஜையைக் குத்தினார். ‘எனக்கும் ஒரு மேஜை போட்டிருந்தால், இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்’ என்றார் பண்டிதமணி. 

நூறாண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகள் தொடங்கி வைத்ததின் தாக்கம் இன்றும் இருக்கிறது. நீதிக்கட்சியில் தொடங்கிய ஸம்ஸ்க்ருதம் கலவாத பெயர் வைத்துக் கொள்ளும் பழக்கம், மறுமலர்ச்சி தி.மு.க. வரை தொடர்கிறது. பெயர் மாற்ற நடவடிக்கையால் ராஜகோபாலன், சுரதாவாக மாறினார்; நாராயணசுவாமி நெடுஞ்செழியன் ஆக மாறினார். சத்யநாராயணன் ஆற்றலரசாக மாறினார். சின்னராஜு சிற்றரசாக மாறினார். இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டவர்கள், சில விஷயங்களை மட்டும் கண்டுகொள்ளவில்லை. சாதிக் பாட்சா விஷயத்தில் சத்தமே இல்லை. நாகூர் ஹனிஃபா விஷயத்தில் நடவடிக்கையே இல்லை. 

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. பெயர் வைக்கும்போது ஆங்கிலப் பெயர்கள், ஃப்ரெஞ்சுப் பெயர்கள், அராபியப் பெயர்கள், ரஷ்யப் பெயர்களாக இருந்தால் கூடுதல் மரியாதை உண்டு. பிராட்லா என்ற பெயரை ரசித்தார்கள். ரூசோ என்ற பெயரை விரும்பினார்கள். ட்ராட்ஸ்கி என்ற பெயரை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஸ்டாலின் என்ற பெயர் கொண்டவரைத் தூக்கிச் சுமக்கிறார்கள். இப்படியாக திராவிட மாயையில், தனித் தமிழ் மாயை இரண்டறக் கலந்து விட்டது. 

subbupara@yahoo.co.in 

courtesy:Thuglak, current issue.."தனித் தமிழ் மாயை – சுப்பு 
திராவிட மாயை – ஒரு பார்வை - 4"

Thursday, June 4, 2009

Sunday, May 10, 2009

Saturday, May 9, 2009

Monday, March 16, 2009

மதசார் பற்ற என்றால் கிலோ என்ன விலை ?

இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்....



பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலைமாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லை யென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.


'கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சி'. மதசார் பற்ற என்பது ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை.

the above article appeared in idlyvadai. my comments below

இந்தியாவில் மதச்சார்பற்ற என்றால் இந்து மதத்திற்கு எதிரான என்று பொருள் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மதச்சார்பின்மையின் காவலர்களான இடது சாரிகள் தைரியமாக முஸ்லீம் லீகுடன் மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பார்களா ?

மதச்சார்பின்மை என்றாலே போலி மதச்சார்பின்மை தான் என்பதற்கு இதையும் விட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?

ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994

Sunday, March 15, 2009

a comedy called third front

ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994

முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஒரு பழமொழி உண்டு. அது போல மூன்றாவது அணி இறந்து 3-4 மாதங்கள் கூட ஆக வில்லை, மீண்டும் ஒரு மூன்றாவது அணி. ஆரம்பிக்கும் போதே அபசகுனம் போல நான் தான் p.m. candidate என்று மாயாவதி ஆரம்பித்து விட்டார்.



ஒரு பேச்சுக்கு இந்த அணி தேர்தலில் வென்றாலும், யாரை பிரதமர் ஆக்குவார்கள். மாயாவதியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது, ஜெயலலிதாவை மாயாவதிக்கு பிடிக்காது, தேவ கௌடாவை யாருக்கும் பிடிக்காது.

இடது சாரிகள் பதில் கூற வேண்டிய எந்த பதவிக்கும் வர மாட்டர்கள். வெளியே இருந்து ஆதரவு கொடுத்து ghost government-ஆக இருப்பார்களே தவிர நேரடியாக ஆட்சி செய்ய மாட்டர்கள். தங்கள் இடமான கேரளாவில் கூட இரெண்டு இடது சாரி கட்சிகளுக்குள் சீட் பேரத்தில் தகராறு. ஆனால் மற்ற இடத்தில் ஒற்றுமை. என்ன கொள்கையோ?


முலாயம், சந்திரபாபு நாயுடு இருவரும் தங்கள் கட்சியை மக்கள் மறக்காமல் இருக்க எதையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.


எப்பேர்பட்ட அணி.

முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி என்றெல்லாம் வரும். கூட்டணி கூத்துக்கள் இவ்வளவு மலிவாக இல்லாத அந்த காலத்திலேயே இப்போது நடக்கும் அத்தனை அரசியல் குழப்பங்களையும் அதில் அப்பட்டமாக காட்டி இருப்பார் சோ. அது தான் நினைவுக்கு வருகிறது.

Thursday, March 12, 2009

பிச்சைப் பாத்திரம்

this was posted by "hearta" in orkut 'THUGLAK' community

எங்கள் " இசை ஞானி" இளையராஜா அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் 2009 - சிறப்பு பாடல் !

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே என் மக்களே!

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

தேர்தல் என்னும்

பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய

ஓட்டு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

அன்னையும் அம்மாவும் தந்ததா

இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா

கூட்டணி நான் அறியாததா

புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் உயர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

அத்தனை ஓட்டுகள் உம் இடத்தில்

யாம் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்

வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்

அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்

ஒரு முறையா இரு முறையா

பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்

பல பதவி பல லகரம்

ருசி கண்ட நாக்கினை அரிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்

அரசியல் வாழ்க்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருள்

என்று அரிக்கின்ற மனம் கரம் கூப்புதே!

வாக்குறுதி தருகிறேன்

வாழ்வளிக்க வருகிறேன்

உன் ஒருவிரல் பெரும் வரமளித்து ஜெயம் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே என் மக்களே!

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

தேர்தல் என்னும்

பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய

ஓட்டு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

- கவிஞர் ஓட்டாண்டி

Wednesday, March 11, 2009

THIS WAS MY RESPONSE TO THE FOLLOWING BLOG POST.

http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_11.html

ஜெயகாந்தன் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒருவன் எழுந்து கேள்வி கேட்டான். பாஞ்சாலி பத்தினியா? இல்லை பரத்தையா? என்று. அதற்கு JK என்ன சொன்னார் தெரியுமா? பத்தினிக்கு பிறந்தவன் பார்வையில் அவள் பத்தினி, பரத்தைக்கு பிறந்தவன் பார்வையில் அவள் பரத்தை என்று.

அது போல இந்த மாதிரி சுவரொட்டிகள் அடிப்பவர்களுக்கு எல்லாம் மிகுந்த தாழ்வு மனப்பான்மையும் மன அழுத்தமும் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

மற்றவர்கள் பிறப்பைப் பற்றி இவர்களுக்கு என்ன வந்தது? இவர்கள் சொல்வதைக் கேட்கா விட்டால் அவன் .........!! நான் சொல்கிறேன் இப்படிப் பேசும் திமிர் பிடித்தவர்களின் பிறப்பு தான் கேள்விக்குரியது என்று!! நல்லபடி பிறந்திருந்தால் இப்படி மற்றவர்களைத் தூற்றத் தோன்றாது.

சரி, தமிழர்கள் அங்கு கொல்லப் படுகிறார்கள், அங்கிருக்கும் தமிழர்கள் ஏன் தீக்குளிப்பதில்லை என்று ஒருவர் துக்ளக்கில் கேட்டுள்ளார். அங்கிருப்பவர்களை யாரும் தூண்டி விடுவதில்லை, அங்கிருப்பவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியும். அங்கே தீக்குளித்தால் அதை த்யாகம் என்றோ வீரம் என்றோ கேனத்தனமாக புகழ ஆள் கிடையாது.

இவ்வளவு கொந்தளிக்கும் இந்த போலி தமிழ் உணர்வாளர்கள், அங்கே இலங்கையில் தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது , இங்கே உணவு அருந்தாமல் இருந்தார்கள? நீர் குடிக்காமல் இருந்தார்கள?வேலைக்குப் போகாமல் இருந்தார்களா? தண்ணி அடிக்காமல் இருந்தார்களா, சிகரெட் பிடிக்காமல் இருந்தார்களா? தாங்கள் அனுபவிக்கும் எந்த சுகத்தையும் இவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக விட்டுக் கொடுத்தது போல தெரிய வில்லையே!!

தற்கொலை செய்து கொள்வது தான் சட்ட விரோதம். வீட்டில் உண்ணாவிரதம் இருக்கலாமே! வீட்டுக்குள்ளே இருந்தால் மீடியா கவனம் கிடைக்காதே!!! மற்றவர்கள் கவனிக்கத் தான் இந்த ஆர்பாட்டம் எல்லாம். உண்மையிலேயே வருத்தம் இருந்தால் அது வெளிப்படும் விதமே வேறு.


இவர்களுக்கு இது தொழில். இதை செவ்வனே செய்கிறார்கள். அதே போல மற்றவர்களுக்கு வேறு உருப்படியான தொழில் இருக்கிறது. அதை செய்கிறார்கள். வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டு விட்டு நடு ரோட்டில் மனித சங்கிலியில் நின்றால் தான் அவனுக்கு தமிழ் உணர்வு இருக்கிறது என்று எந்த கபோதி சொன்னானோ தெரியவில்லை.

தமிழ் உணர்வை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. உனக்கு ஒரு வழி என்றால் எனக்கு ஒரு வழி. நீ சொல்வதைக் கேட்டால் தான் எனக்கு தமிழ் உணர்வு சர்டிபிகேட் கிடைக்கும் என்றால் அது எனக்குத் தேவையே இல்லை. நான் தமிழ் விரோதியாகவே இருந்து விட்டு போகிறேன்.

Sunday, March 8, 2009

POLICE vs LAWYERS