Friday, April 1, 2016

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...
வாசகர்களை கூட்டி ஆண்டுக்கொருமுறை விழா நடத்தி அவர்களுடைய விமர்சனங்களுக்கு வழி செய்து அவற்றுக்கு பதில் அளித்து ஓரு கருத்து பரிமாற்றத்துடன் துக்ளக் நடத்தி வருவது பலருக்கு வியப்பாக இருக்கிறது.
நல்ல ஜடியாக்கள் யோசனையின் மூலம் என்க்கு வருவதில்லை அகஸ்மாத்தாக வந்து விடுகின்றன.இந்த ஆண்டு விழா ஏற்ப்பாடும் அப்படித்தான்.
பத்திரிக்கை தொடங்கிய முதல் வருடமான 1970 ல் ஏப்ரல் மாத்த்தில் வாசகர்களோடு ஏதாவது ஏப்ரல் ஃபூல் விளையாட்டு விளையாடலாம் என நினைத்தேன்.துக்ளக்கை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என என முடிவு அறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.இது பற்றி வாசகர்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.ஏப்ரல் 1 மாலை 6.30 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் ஒட்டலில் கூட்டம் நடக்கும் வாசகர்கள் வந்திருந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் என துக்ளக்கில் அறிவித்து விட்டேன்.
என் நினைப்பு இது தான்.ஏப் 1 கூட்டம் என்ற உடனே இது விளையாட்டு என புரிந்து கொண்டு யாரும் வரமாட்டார்கள்,அல்லது 10 அல்லது 15 பேர் இந்த விளையாட்டுக்கு பலியாவர்கள் அவர்களை சமாளித்து விடலாம் என நினைத்தேன்..
அதே போல அன்று மாலை ஒட்டல் வாசலில் துக்ளக்கில் வந்த அறிவிப்பு ஏப்ரல் ஃபூல் தமாஷ் ஏமாந்தவர்கள அஅனைவரும் வீட்டிற்க்கு போய் சேருங்கள் என்ற பலகை தொங்க விடபட்டது.
மாலை 6 மணிக்கு என்க்கு போன் வந்தது.நீ எழுதி வைத்த போர்டை காட்டினால் இங்கு இருக்கும் கூட்டம் எங்களை உதைக்காமல் விடமாட்டாங்க.அதானால் போர்டை எடுத்து உள்ளே வைத்து விட்டோம்.கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை மரியாதையாக வந்து சேர் என அழைப்பு வந்தது..
சரியான வம்பில் மாட்டிக் கொண்டோம் என புரிந்தது.துக்ளக் பிரசுரகர்த்தர் வெங்கட்ராமனையும், ஆசிரியர் குழுவில் சிலரையும் அழைத்து கொண்டு கிளம்பினேன்.நல்லது நடக்க மோகிறது என்றால் தனியாக போகலாம்.தர்ம சங்கடத்தை தனியாக அனுபவிப்பானேன்? என கூடவே இவர்களையும் அழைத்து சென்றேன்.
ஒட்டல் மைதானத்தில் கூடியிருந்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு வரவேற்ப்பு அளிக்க அந்த மிதப்பில் மேடைக்கு போய் சேர்ந்த நான் கூட்டத்தை சமாளிக்க துக்ளக்கில் அரசியல் வேண்டுமா வேண்டாமா என ஆசிரியர் குழுவில் இருந்த சுந்தரம் ஆரம்பித்து வைக்க,ஒவ்வோரு வாசகராக வந்து தங்கள் அபிப்ராயம் மற்றும் துக்ளக் மீதான விமர்சனத்தையும் நாட்டு அரசியல் பற்றிய தங்கள் கருத்தையும் முன் வைத்தார்கள் ..ஒவ்வோருவரும் பேசி முடித்தவுடன் அவரவரவர்க்கு பதில் சொன்னேன்.அந்த கூட்டம் ஒரு விவாத மேடையாக உருமாறியது.
அரசியல் விமர்சனத்தை தொடரவேண்டும் என அனேக வாசகர்களும், துக்ளக்கின் துணிவை அனைவரும் பாராட்ட துக்ளக்கோடு தங்களுக்கும் இருந்த் கருத்து வேறுபாட்டை அவரவர் விவரிக்க அதற்க்கு நான் பதில் கூற கூட்டம் சுமூகமான முடிவை நெருங்கியது.
ஏப்ரல் ஃபூல் செய்யலாம் என்று நினைத்து தான் இந்த் கூட்டத்தை கூட்டினோம்.இத்தனை பேர் கூடியதும் கூடியதும் வேறு வழியில்லாமல் கருத்தரங்கமாகவே மாற்றிவிட்டேன்.விளையாட்டாக ஆரம்பித்தாலும் மிகவும் ஆழமான விமர்சனங்களோடு இது முடிந்திருக்கிறது என று நன்றி கூறி முடித்தேன்.
இந்த கூட்டத்தினால் ஏற்பட்ட அனுபவத்தின காரணமே ஆண்டு தோறும் நடக்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சி...
சோ அவர்களின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் ...