Saturday, May 25, 2013

இரண்டாம் டெசோ

சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் படம் இரண்டாம் டெசோ.கலைஞர் கிரியேசன் சார்பில் மு.கருணாநிதி கதை வசனம் எழுதி இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ள இந்த படம் வசூலில் தோல்வி கண்டாலும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு திரைக்காவியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

படத்தின் கதை இதுதான்;-
சென்னையில் வாழும் ஹீரோ கருணாநிதி,திமுக என்ற வர்த்தக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.டெல்லியில் வசிக்கும் அவருடைய நண்பர்களான சோனியாவும்,மன்மோஹனும் காங்கிரஸ் என்ற வர்த்தக நிறுவனத்தை நடத்திவருகிறார்கள்.கருணாநிதியும்,அவருடைய டெல்லி நண்பர்களும் இணைந்து ஐக்கிய முற்போக்கு கம்பெனி என்ற வர்த்தக நிறுவனத்தை துவக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி பெரும் லாபம் குவிக்கிறார்கள்.

இப்படி இவர்களின் வியாபாரம் ஜரூராக போய்க்கொண்டிருக்கும் வேலையில் பக்கத்து தீவுநாடான இலங்கையில் ஒரு யுத்தம் மூள்கிறது.ராஜபக்சே என்பவரது கொலைப்படைகளும்,பிரபாகரன் என்பவரது கொலைப்படைகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடுகின்றன.ராஜபக்சே கருணாநிதியின் டெல்லி பார்ட்னர் சோனியாவின் நண்பராவார்.சோனியாவின் கணவர் ராஜீவ் என்பவரை பிரபாகரன் கொன்றுவிடுவதால் அவர் ராஜபக்சேயின் உதவியுடன் பிரபாகரனை ஒழிக்க முயல்கிறார்.

கடுமையான யுத்தத்தின் முடிவில் பிரபாகரனும்,அவரது கொலைப்படைகளும் ராஜபக்சேயின் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகின்றன.அப்போது ஏராளமான அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள்.இச்சம்பவத்தினால் தமிழ்நாட்டில் கருணாநிதியின் வர்த்தக நிறுவனம் மேல் மக்களுக்கு அதிருப்தியும்,கோபமும் ஏற்படுகிறது.இதை பயன்படுத்தி அவரது போட்டி நிறுவனமான அம்மா &சும்மா என்ற மற்றொரு கம்பெனிக்கு மக்களின் ஆதரவு பெருகுகிறது.

இதனால் கலக்கமடையும் கதாநாயகன் கருணாநிதி மக்களின் ஆதரவை திரும்பபெறவும்,இழந்த நற்பெயரை மீட்கவும் "இரண்டாம் டெசோ"என்ற அமைப்பை உருவாக்குகிறார். தனது டெல்லி நண்பர்களோடு புதிய "வர்த்தக பேரங்களை"நடத்தி,அதன் மூலமாக எவ்வாறு தனது நிறுவனத்தை அவர் மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்புகிறார் என்பதை சுவாரஸ்யமாய் காட்டுகிறது இந்த இரண்டாம் டெசோ திரைப்படம்.

படத்தின் ஆரம்பமே போர்கள காட்சிதான்.இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இந்த காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.ராஜபக்சேவும்,அவரது தம்பி கோத்தபையாவும் ஏராளமான ஆயுதங்களுடன் பிரபாகரனின் கொலைப்படைகளை தாக்க,பிரபாகரனின் படைகள் வீராவேசத்தோடு பாய்ந்து சென்று அப்பாவி தமிழர்களின் முதுகுகளுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் காட்சி பிரமிப்பூட்டுகிறது.இறுதியில்,கொடியவன் கோத்தபைய்யா அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றதும் முதுகின் பின்னாலிருந்து வெளிவரும் பிரபாகரன் படையினர் "நாங்கள் சரணடைகிறோம்.எங்களை கொன்றுவிடாதீர்கள்"என்று போர்குணத்தோடு கண்களில் நீர் மல்க கெஞ்சும் காட்சி கல் மனதையும் கலங்க வைக்கிறது.அவர்களின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் கொலைவெறியன் கோத்தபையா ,சின்னஞ்சிறுவர்கள் என்றும் பாராமல் பிரபாகரனின் கொலைப்படைகளை ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லும் காட்சியில் நம் கண்கள் குளமாகின்றன.பிரபாகரனின் சடலத்தை காட்டும் காட்சியில் அவர் முன்பொருமுறை பேசிய "நானும்,ராஜபக்சேவும் சகோதரர்கள்.எங்கள் பிரச்னையில் தலையிட எந்த நாயுக்கும் உரிமையில்லை"என்ற வார்த்தைகள் பின்னணியில் ஒலிப்பது "டைரக்டர் டச்"!!!

தனது நண்பன் பிரபாகரன் இறந்த தகவல் கிடைத்தாலும் வர்த்தக நலன் கருதி அதை நம்ப மறுக்கும் காட்சியில் கருணாநிதியின் நடிப்பு சற்று நாடகத்தனமாக அமைந்திருக்கிறது.இரங்கல் கவிதை வாசித்தால் டெல்லி வியாபாரம் பாதிக்கும் என்ற காரணத்தால் நான்கு சுவர்களுக்குள் அவர் அழுது புலம்பும் காட்சியும் நாடகத்தனமே.ஹீரோவுக்குரிய எந்த சாகசமும் செய்யாமல் குடும்பநலன் கருதி அடக்கி வாசிக்கிறார் கருணாநிதி.

ஹீரோ டம்மியாக போனாலும் காமெடி காட்சிகள் படத்திற்கு தோள் கொடுக்கின்றன.காமெடியன்களாக ஹீரோவுடன் வலம்வரும் வீரமணியும்,திருமாவளவனும் தேர்ந்த நகைச்சுவை நடிகர்களாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.வீரமணி அந்த கால நகைச்சுவை நடிகர் ஈ.வே.ராமசாமி பாணியில் தொட்டதற்க்கெல்லாம் "பார்ப்பன சதி"என்று கூறி குபீர் சிரிப்பை வரவைக்கிறார்.தூங்கிகொண்டிருக்கும் வீரமணியை திருமா எழுப்ப,"என்ன....?அதுக்குள்ள விடிஞ்சுருச்சா ?எல்லாம் பார்ப்பன சதி"என்று சொல்லும் காட்சியிலாகட்டும்,பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கும்போது திடீரென்று வண்டி நிற்க ,வீரமணி எழுந்து "என்ன...பஸ் ப்ரேக் டவுனா..?எல்லாம் பார்ப்பன சதி"என்று வசனம் பேசும் காட்சியிலாகட்டும் ,சும்மா சொல்லக்கூடாது....வீரமணி அடிக்கும் லூட்டியில் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது."தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்கா விட்டால் ஆபிரகாம் லிங்கனே ஆடு,மாடுதான் மேய்த்து கொண்டிருந்திருப்பார்" என்று அவர் அடிக்கும் "விட்"டில் சிரித்து,சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறது.

ஒருபுறம் வீரமணி எவர்க்ரீன் காமெடியில் பட்டையை கிளப்ப,மற்றொருபுறம் திருமா க்ளாஸிக் காமெடியில் கலக்குகிறார்.தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் பயணித்து ராஜபக்சேவை "கொலைகாரன்"என்று வசைபாடும் போதும் ,திமுக வர்த்தக குழுவோடு கொழும்பில் ராஜபக்சேவை சந்திக்கும்போது வாயெல்லாம் பல்லாக அவரோடு சிரித்து உரையாடும்போதும் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார் திருமா.

ராஜபக்சேயிடம் விடைபெற்று கிளம்பும் நேரத்தில் "இப்ப போறேன்.ஆனா..திரும்பி....( சற்று இடைவெளிவிட்டு)..வரமாட்டேன்னு சொல்லவந்தேன்"என்று ஜகா வாங்கும்போது திருமாவின் முகபாவனையை பார்த்து சிரிக்காதவர்களே இருக்கமுடியாது.

கருணாநிதியின் டில்லி பார்ட்னர்களாக வரும் சோனியாவும்,மன்மோகனும் தங்களின் மர்ம நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.கருணாநிதி இருவருக்கும் சளைக்காமல் கடிதம் எழுதுவதும்,ஒவ்வொரு முறையும் "நானும் கவலைப்படுகிறேன்"என்று பதில் கடிதத்தை மன்மோகன் எழுதுவதும் படம் நெடுக இடம்பெறுவது பெரும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

பின்னணி இசையில் கருணாநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் நாகூர் ஹனீபாவின் "சோனியாவிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை"என்ற பாடல் ரசிக்கவைக்கிறது.

இறுதி காட்சியில் கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கம்பெனியில் இருந்து விலகுவதாக அறிவிப்பது சற்று நாடகத்தனமாக அமைந்துவிட்டது.எனினும்,இரண்டாம் டெசோ படத்தின் முதல் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த பாகத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

மொத்தத்தில் கருணாநிதியின் சமீபத்திய தோல்வி படவரிசையில் "இரண்டாம் டெசோ" -வும் ஒரு படுதோல்வி "மொக்க" படமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!!!.

Thursday, March 28, 2013

துக்ளக் கேள்வி பதில்கள்

துக்ளக் கேள்வி பதில்கள் 

கே : இலங்கைப் பிரச்னையில், இப்போது மாணவர்களும் இணைந்து கொள்வது பற்றி?

ப : இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது எதுவும் நடந்து விடாது. ஆனால் இங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது தீமை செய்யும். இந்த மாதிரி போராட்டங்கள் சாதிக்கப் போவது இவ்வளவுதான்.



கே : டெஸோ அமைப்பு வலிமை பெற வாய்ப்புண்டா?


ப : தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதில் அக்கறை காட்டவில்லை. தேர்தல் ஓட்டுக்காகவே கூட மற்ற பல கட்சிகளின் கூட்டணியை நாட வேண்டிய நிலையில் உள்ள தி.மு.க., இந்த தனி டெஸோவிற்கு என்ன வலிமையைச் சேர்க்கப் போகிறது? முதல் டெஸோ மறைந்தது போல, இரண்டாம் டெஸோவும் நாளடைவில் மறைந்து போகும்.



கே : இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா தனிக் கட்சி துவங்கியுள்ளாரே! ஜெயிப்பாரா?

ப : ஜெயிக்க மாட்டார். ஏதாவது ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சியைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்துவாரோ, என்னவோ! அதற்கு மேல் அவருக்குப் பலம் கிட்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.



கே : இலங்கைப் போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோருவது தொடர்பாக, இந்தியா ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறது?

ப : இலங்கை விரோதி நாடு அல்ல; அந்த நாட்டுடன் இந்தியாவிற்கு தொழில் ரீதியாக, வர்த்தக ரீதியாக உறவுகள் இருக்கின்றன; அங்குள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் சம உரிமை பெறுவதற்கு வழி இந்திய – இலங்கை விரோதம் அல்ல; இன்று இலங்கைக்கு நாம் செய்வதை, நாளை காஷ்மீர் தொடர்பாக நமக்குச் செய்ய பாகிஸ்தான் முனையும்.... என்பது போன்ற பல காரணங்களினால்தான், இந்தியா இவ்விஷயத்தை ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுகிறது.



கே : ‘தலைவர் கலைஞர் நடத்தும் போராட்டங்களை அரசியல் தந்திரம் என்று கூறுவது வருந்தத்தக்கது’ – என்கிறாரே கனிமொழி எம்.பி.?


ப : நியாயம்தானே! கலைஞரின் நடவடிக்கைகளை ‘அரசியல்’ என்று கூறலாமே தவிர, ‘தந்திரம்’ என்று எப்படிக் கூறுவது? தந்திரம் என்றால், அதைச் செய்பவர்களுக்கு அது உதவ வேண்டுமே? அவருடைய அரசியல் நடவடிக்கைகள் அவருக்கோ, அவருடைய கட்சிக்கோ உதவுகிற மாதிரியா இருக்கின்றன? அதைத்தான் கனிமொழி சுட்டிக்காட்டியிருக்கிறார்.



கே : இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப : அநேகமாக.



கே : சுப்ரமண்யம் ஸ்வாமி இலங்கையில் அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியது சரியா, தவறா?

ப : ஒரு நட்பு நாட்டின் அதிபரை, இங்குள்ள ஒரு அரசியல்வாதி சந்திப்பதால் ஒரு தவறுமில்லை.



கே : ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், அதன் விளைவாக பெரிதும் பாதிக்கப்படப் போவது இலங்கைத் தமிழர்கள்தான். அவர்களுக்கு நாம் தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளை வழங்க முடியாத நிலையும் ஏற்படும்’ – என்கிறாரே ஞானதேசிகன்! இது மிரட்டல்தானே?

ப : இதில் என்ன மிரட்டல் இருக்கிறது? ஞானதேசிகன் ஒரு நடைமுறை உண்மையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நாம் பிரச்னைகளை உருவாக்கி விடக் கூடாது என்கிற பொருளில் அவர் பேசியிருப்பதில் தவறு காண்பது சரியல்ல. 

கே : காவிரிப் பிரச்னையிலும், இலங்கைப் பிரச்னையிலும் கலைஞர் குழப்பியது போல், வேறு எந்த அரசியல் தலைவரும் குழப்பியது உண்டா! இப்படிக் குழப்புவதற்கு காரணம் என்ன...?

ப : குழப்புவது என்பது மற்ற பலருக்கு ஒரு தவறு; வேறு வழியில்லாமல் நிகழ்ந்து விடுவது. கலைஞருக்கு அது ஒரு கலை; அவர் பாடுபட்டுக் கற்று வந்தது அது. இடைவிடாத பயிற்சியின் மூலம் அந்தக் கலையில் அவர் வெகுதூரம் முன்னேறி விட்டார்.



கே : மார்ச் 12-ஆம் தேதியன்று டெஸோ போராட்டத்தில் பங்கேற்ற திருச்சி தி.மு.க.வினர் கைகளில் இருந்த பேனர்களில், பிரபாகரன் மகனின் பெயர் ‘பாலகிருஷ்ணன்’ என்று படு அபத்தமாக அச்சிடப்பட்டிருந்தது பற்றி? (தினமலர் 13.3.13 புகைப்படத்துடன் செய்தி)

ப : போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம், நமது நாட்டு அரசியல் போராட்டங்களில் கிடையாது.



கே : ‘டெஸோ சார்பில் ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பொதுவேலை நிறுத்தம், பிரமாதமான வெற்றி அடைந்துள்ளது’ – என்று கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பற்றி?


ப : படுதோல்வியையே, வெற்றி என்று கருதுகிற பக்குவத்தை அவர் அடைந்திருப்பது பாராட்டத்தக்கது. இதே மாதிரி மகிழ்ச்சியை பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. பெறட்டும். அது தமிழகத்திற்கும், நாட்டிற்கும் நல்லது. 

Sunday, February 17, 2013

ராஜாஜி


ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.

""தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்'' என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.

""அதனால் என்ன?'' என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, ""அந்த நீதிபதியிடம் போய் "முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்' என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்''என்றார்.

அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, ""இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்'' என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.

அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.

("துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது')
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.

""தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்'' என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.

""அதனால் என்ன?'' என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, ""அந்த நீதிபதியிடம் போய் "முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்' என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்''என்றார்.

அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, ""இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்'' என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.

அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.

("துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது')

Saturday, February 16, 2013

துக்ளக் கேள்வி பதில்

கே: கலைஞர், தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அடிக்கடி சொல்லி வருவதைக் கிண்டல் செய்யும் தாங்கள், உங்களையும் அறியாமல் கம்யூனிஸ்ட்களைப் பாராட்டுகிறீர்கள் என்றுதானே அர்த்தமாகிறது? 

ப: கலைஞர், ஒரு கம்யூனிஸ்ட் என்பதைக் கிண்டல் செய்தால், அது கம்யூனிஸ்ட்களுக்குப் பாராட்டு என்று கூறுவதால், நீங்கள் உங்களையும் அறியாமல் கலைஞரைக் கிண்டல் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. சரிதானே?



கே: கூட்டணிக்காக ஏழு எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ஸீட்டும் தே.மு.தி.க.வுக்குத் தர தி.மு.க. ரெடியாமே? 

ப: நான் கேள்விப்பட்டது வேறுவிதமாக இருக்கிறதே! பதினைந்து எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ஸீட்டும் தரவில்லை என்றால், தி.மு.க. கூட்டணியே வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை தீர்மானித்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. (நீங்கள்தான் எதையாவது கிளப்பிவிட வேண்டுமா, என்ன? எனக்கு அந்த உரிமை கிடையாதா? ஏதோ என்னால் முடிந்ததை நானும் செய்து வைக்கிறேன். இதனால் சில பிரச்னைகள் எழுந்தால் நல்லதுதானே!)

Saturday, February 9, 2013

துக்ளக் கேள்வி பதில்



கே: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு, நாட்டின் கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்கு தெரியும் என்கிறாரே கருணாநிதி? 

ப: கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் ஒரு சிலவற்றில் ரொட்டியோ, சப்பாத்தியோ சாப்பிட்டால், கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம் என்று கலைஞர் நினைக்கிறார் போலிருக்கிறது. இதுதான் சரியான வழி என்றால் ஒருவன், ஒரு அணு விஞ்ஞானியின் வீட்டிற்குச் சென்று ஒருநாள் ஒரு இட்லி சாப்பிட்டு விட்டு வந்தால் போதும். அவனுக்கு அணு விஞ்ஞானம் பற்றி எல்லாம் தெரிந்து விடும்.