Sunday, February 17, 2013

ராஜாஜி


ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.

""தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்'' என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.

""அதனால் என்ன?'' என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, ""அந்த நீதிபதியிடம் போய் "முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்' என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்''என்றார்.

அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, ""இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்'' என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.

அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.

("துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது')
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.

""தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்'' என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.

""அதனால் என்ன?'' என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, ""அந்த நீதிபதியிடம் போய் "முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்' என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்''என்றார்.

அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, ""இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்'' என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.

அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.

("துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது')

Saturday, February 16, 2013

துக்ளக் கேள்வி பதில்

கே: கலைஞர், தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அடிக்கடி சொல்லி வருவதைக் கிண்டல் செய்யும் தாங்கள், உங்களையும் அறியாமல் கம்யூனிஸ்ட்களைப் பாராட்டுகிறீர்கள் என்றுதானே அர்த்தமாகிறது? 

ப: கலைஞர், ஒரு கம்யூனிஸ்ட் என்பதைக் கிண்டல் செய்தால், அது கம்யூனிஸ்ட்களுக்குப் பாராட்டு என்று கூறுவதால், நீங்கள் உங்களையும் அறியாமல் கலைஞரைக் கிண்டல் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. சரிதானே?



கே: கூட்டணிக்காக ஏழு எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ஸீட்டும் தே.மு.தி.க.வுக்குத் தர தி.மு.க. ரெடியாமே? 

ப: நான் கேள்விப்பட்டது வேறுவிதமாக இருக்கிறதே! பதினைந்து எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ஸீட்டும் தரவில்லை என்றால், தி.மு.க. கூட்டணியே வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை தீர்மானித்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. (நீங்கள்தான் எதையாவது கிளப்பிவிட வேண்டுமா, என்ன? எனக்கு அந்த உரிமை கிடையாதா? ஏதோ என்னால் முடிந்ததை நானும் செய்து வைக்கிறேன். இதனால் சில பிரச்னைகள் எழுந்தால் நல்லதுதானே!)

Saturday, February 9, 2013

துக்ளக் கேள்வி பதில்



கே: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு, நாட்டின் கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்கு தெரியும் என்கிறாரே கருணாநிதி? 

ப: கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் ஒரு சிலவற்றில் ரொட்டியோ, சப்பாத்தியோ சாப்பிட்டால், கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம் என்று கலைஞர் நினைக்கிறார் போலிருக்கிறது. இதுதான் சரியான வழி என்றால் ஒருவன், ஒரு அணு விஞ்ஞானியின் வீட்டிற்குச் சென்று ஒருநாள் ஒரு இட்லி சாப்பிட்டு விட்டு வந்தால் போதும். அவனுக்கு அணு விஞ்ஞானம் பற்றி எல்லாம் தெரிந்து விடும்.