Monday, October 1, 2012

THUGLAK KELVI BADHIL

கே: ‘கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு, அன்னா ஹஸாரே குழு உறுப்பினர் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளது பற்றி...?

ப: தான் நிற்கிற இடத்தில் ஒரு கூட்டம் கூடுகிறது என்பதை டெலிவிஷனில் அடிக்கடி பார்ப்பதில், கெஜ்ரிவாலுக்கு ஆசை வந்து விட்டது. அதனால் எங்கெங்கு கூட்டம் சேருகிறதோ, அங்கெல்லாம் போய் நின்று விடுவார் போலிருக்கிறது. இப்பொழுது கூடன்குளத்தில் ஒரு கூட்டத்தைப் பார்த்தார்; அங்கு போய் நின்று கொண்டு விட்டார். அடுத்து சென்னை, மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழாவில் கூட்டம் சேருகிறபோது, அதற்கு முன்னால் போய் நின்று கொண்டு, ‘இவ்வளவு பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஊழலை எதிர்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் என்னுடைய புதிய கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்’ என்று சொன்னாலும் சொல்வார்.