Saturday, February 9, 2013

துக்ளக் கேள்வி பதில்



கே: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு, நாட்டின் கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்கு தெரியும் என்கிறாரே கருணாநிதி? 

ப: கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் ஒரு சிலவற்றில் ரொட்டியோ, சப்பாத்தியோ சாப்பிட்டால், கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம் என்று கலைஞர் நினைக்கிறார் போலிருக்கிறது. இதுதான் சரியான வழி என்றால் ஒருவன், ஒரு அணு விஞ்ஞானியின் வீட்டிற்குச் சென்று ஒருநாள் ஒரு இட்லி சாப்பிட்டு விட்டு வந்தால் போதும். அவனுக்கு அணு விஞ்ஞானம் பற்றி எல்லாம் தெரிந்து விடும்.