Sunday, March 8, 2009

கே: கடலூரில் இலங்கைப் பிரச்னைக்காக உயிர் நீத்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள், கடலூர் பஸ் நிலையத்தில் நுழைந்து 21 பஸ்களைச் சேதப்படுத்தி, வங்கி ATM மற்றும் BSNL அலுவலக கண்ணாடிகளையும் உடைத்து, DMK பேனர்களையும் சேதப்படுத்தியுள்ளனர் - என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளாரே?

ப: இங்கே பஸ்களை எரித்து, பொதுச் சொத்தை நாசம் செய்தால், இலங்கைப் பிரச்னை தீர்ந்து விடுமா? இது தொடர்பாக, 'துக்ளக்' வாசகர் 'அதிரை புகாரி' என்பவர், நமக்கு அனுப்பியுள்ள கேள்வி, நமது மாநில அரசியல் தலைவர்கள் பார்வைக்கு உரியது. அவர் கேள்வி இது: 'சிங்கள அரசு, போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கையில் உள்ள எந்த தமிழனும் தீக்குளிக்க வில்லையே, ஏன்?'