Sunday, March 1, 2009

கேள்வி பதில்

கே: ' கவர்னன்ஸ்' தொடர்பான மத்திய அரசின் பதினெட்டு விருதுகளில், பதினொன்று பா... மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கிடைத்துள்ளது குறித்தும், தமிழகத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது குறித்தும்?

: 'E கவர்னன்ஸ்'க்கு விருது தருகிற மத்திய அரசு, 'N கவர்னன்ஸ்'க்கு ஒரு விருது தரட்டுமே! அது நிச்சயம் தமிழகத்திற்கு தான். (N = No)

கே: தற்போதைய நிலையில், ராமர் கோவில் பிரச்னையை பா... கிளப்புவது சரி தானா?

: தேவையே இல்லை என்பது என் கருத்து. இது, ஆறப் போட்டுத் தீர வேண்டிய பிரச்னையாகத்தான், இப்போது காட்சியளிக்கிறது. கிளறுவது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.

கே: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? 'பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம்....என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?' என்று கேட்க வேண்டியது தானே! அப்போது தானே உங்கள் கேள்வி முழுமை அடையும்!

கே: டெல்லியில் .தி.மு..வினர் நடத்திய உண்ணாவிரத மேடையில், '20 ஆண்டு காலமாக இருந்து வரும் இலங்கைப் பிரச்னையை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை' - என்று அத்வானி பேசியிருக்கிறாரே? பா..., ஆட்சியில் இருந்த போது கண்டு கொண்டிருக்கலாமே?

: இதை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்று தீர்மானித்து விட்ட பிறகு, பேச்சில் நியாயமோ , தர்க்கவாதமோ இருக்குமா என்ன? இப்படி அர்த்தம் இல்லாமல் தான் பேச்சு அமையும்.