Sunday, February 8, 2009

போலி தமிழ்ப் பற்று

மக்கள் தொலைக்காட்சிக்கு என்று ஒரு தனி வகைத் தமிழ் இருக்கிறது. எல்லோரும் ஒரு மாதிரி தமிழ் பேசினால் இவர்கள் தனியாக ஒரு தமிழ் பேசுவார்கள்.

'மத்திய' என்பது வடமொழியாம். அதனால் 'நடுவன்' அரசு என்று தான் சொல்ல வேண்டுமாம். ஆனால் அதிகாரி என்ற வார்த்தை தமிழ் வார்த்தையாம். அதை அப்படியே வைத்து கொள்வார்களாம்.

இன்னும் சில பத்திரிகைகள் இருக்கின்றன. செயலலிதா என்றும் சூலை மாதம், சனவரி மாதம் என்றும் தான் அச்சடிப்பார்கள். ஜ என்பது தமிழ் கிடையாதாம்.

ஆனால் ஸ்டாலின் என்று அச்சடிப்பார்கள். அப்போது மட்டும் ஸ தமிழ் எழுத்து ஆகி விடும்.

கார் என்று சொன்னால் தமிழ்ப் பற்று எப்படி வெளிப்படும். மகிழ்வுந்து என்றால் தான் நீ அக்மார்க் தமிழன். ஆனால் ஆப்பிள் பழத்தை ஆப்பிள் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இன்னும் இவர்களுக்கு சரியான வார்த்தை கிடைக்க வில்லை. செம்பேரிக்காய் என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடிக்கும் வரைக்கும் ஆப்பிள் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

இது போல் இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.

all arising out of identity crisis. போலி அடையாளங்கள் இருக்கிற வரைக்கும் இப்படிப் பட்ட முட்டாள் தனங்கள் செய்யத் தான் வேண்டி இருக்கும்.